சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.

    இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.

    ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் 'நரி விருத்தம்' என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு 'செம்பொன்வரைமேல்' என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், 'மூவா முதலா' எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர்.

    பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார்.

    பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.

 

கடவுள் வாழ்த்து

  1. சித்தர் வணக்கம்
  2. அருகர் வணக்கம்
  3. மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
  4. அவை அடக்கம்

பதிகம்

நாமகள் இலம்பகம்

  1. நாமகள் இலம்பகம் - நாட்டு வளம்
  2. நகர் வளம் - புடை நகர்
  3. அகழியின் தோற்றம்
  4. மதிலின் தோற்றம்
  5. அகநகர்த் தோற்றம்
  6. பரத்தையர் சேரியின் தோற்றம்
  7. கடை வீதிகள்
  8. தெருக்களின் தோற்றம்
  9. தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல்
  10. அரண்மனையின் சிறப்பு
  11. சச்சந்தன் வரலாறு
  12. விசயையின் தோற்றம்
  13. சச்சந்தன் விசயையை மணத்தல்
  14. சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்
  15. சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல்
  16. கருவுறுதலும், கனவு காணுதலும்
  17. விசயை, அருகப் பெருமானை வணங்குதல்
  18. விசயை சச்சந்தனை வணங்கி, தான் கண்ட மூன்று கனவுகளைக் கூறுதல்
  19. சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்
  20. அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்
  21. விசயை தாய்மையுறுதல்
  22. சச்சந்தன் கவலையுறுதல்
  23. 'எந்திர ஊர்தியைச் செய்க' என அறிவு என்னும் அமைச்சன் கூறல்
  24. சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்
  25. மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்
  26. சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்
  27. தருமதத்தன் அறிவுரை கூறுதல்
  28. தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்
  29. கட்டியங்காரன் சினந்து கூறுதல்
  30. தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்
  31. கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்
  32. கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல் 
  33. விசயை துன்புறுதல்
  34. விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்
  35. சச்சந்தன் கோபங்கொள்ளல்
  36. சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்
  37. சச்சந்தன் வீழ்தல்
  38. சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்
  39. சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்
  40. அவலங்களுக்கிடையே கட்டியங்காரன் மன்னன் ஆதல்
  41. சீவகன் பிறப்பு
  42. விசயை புலம்புதல்
  43. விசயையின் துன்ப நிலையைக் கண்டு அஃறிணைப் பொருள்கள் இரங்குதல்
  44. சுடுகாட்டில் தெய்வம் ஒன்று உதவி செய்தல்
  45. கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல் 
  46. விசயை துறவு நிலையைப் பூணுதல்
  47. விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்
  48. சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்
  49. சீவகன் வளர்தல்
  50. அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்
  51. அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்
  52. அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல்

கோவிந்தையார் இலம்பகம்

  1. அச்சணந்தி பிறவி நீத்தல்
  2. சீவகன் குமரன் ஆதல்
  3. வேடர்கள் ஆநிரை கவர எண்ணுதல்
  4. வேடர்கள் நிமித்தகனை இகழ்ந்து ஆநிரை கவர எண்ணுதல்
  5. தீங்கு கருதி ஆயர், காவலுக்குச் செல்லுதல்
  6. வேடர்கள் ஆநிரை கவர்தல்
  7. கட்டியங்காரனுக்கு ஆயர்கள் செய்தி உணர்த்தல்
  8. கட்டியங்காரன் படை தோல்வியுறல்
  9. நந்தகோன், நிரை மீட்பாருக்குத் தன் மகளை மணம்புரிந்து தருவதாக முரசு அறைதல்
  10. சீவகன் போருக்கு எழுதல்
  11. நிமித்திகன் வேடரைத் தடுத்தல் 
  12. நிமித்திகன் சொல்லை ஏற்காது வேடர் போரிடச் செல்லுதல்
  13. சீவகன் வேடர்களுடன் போரிடுதல்
  14. வேடர்கள் போரில் தோற்று ஓடுதல்
  15. சீவகன் ஆநிரை மீட்டு வருதலும், நகர மாந்தர் மகிழ்ச்சியும்
  16. நந்தகோன் தன் வரலாறு கூறித் தன் மகள் கோவிந்தையை மணக்க சீவகனை வேண்டல்
  17. பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல்
  18. பதுமுகன் இன்பம் நுகர்தல்

 

Add a comment

இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள்.

இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு.

கடவுள் வாழ்த்து

முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந் தான் தனக்கென்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே.    1

அவையடக்கம்


நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார் புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே.    2

தூய மனம்


வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.     3

போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல்
கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்
சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல்
வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்.    4

பற்றை பற்று கொண்டு நீக்கல் அரிது


வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும்
புகழ் எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்
தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார்
அகையழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ!    5

அனல் என நினைப்பிற் பொத்தி அகந் தலைக் கொண்ட காமக்
கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர்போகாமை வைப்பார்.     6

யாக்கை நிலையாமை


போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்.    7

இரக்கமில்லாத கூற்றுவன்


அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்.    8

பல நிலைகளைக் கடக்கும் சரீரம்


பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!    9

நிலையில்லா வாழ்க்கை


கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றே
மீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லா
நாள் அடி இடுதல் தோன்றும் நம்முயிர் பருகும் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா!    10

ஊனுடம்பின் இழிவு


நன்கணம் நாறும் இது என்று இவ் உடம்பு நயக்கின்றது ஆயின்
ஒன்பது வாயில்கள் தோறும் உள் நின்று அழுக்குச் சொரியத்
தின்பது ஓர்நாயும் இழுப்பத் திசைதொறும் சீப் பில்கு போழ்தின்
இன்பநல் நாற்றம் இதன்கண் எவ்வகை யாற்கொள்ள லாமே.    11

மாறுகொள் மந்தரம் என்றும் மரகத(ம்) வீங்கு எழு என்றும்
தேறிடத் தோள்கள் திறத்தே திறந்துளிக் காமுற்றது ஆயின்
பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின்
ஏறிய இத் தசைதன் மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ!    12

உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்
குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ !    13

எனதெனச் சிந்தித்தலால் மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னல் ஆமோ!    14

மன்னனைப் போற்றுதல்


இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை
அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்    15

சீற்றம் செற்றுப்பொய் நீக்கிச் செங்கோலினால்
கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை
மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத்
தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.     16

குற்றப்படாத வண்ணம் காத்தல்


மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறையன்று என்பார்.     17

ஆதலும் அழித்தலும்
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று.    18

வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொழிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.    19

[கீழ்க்காணும் பாடல்கள் குண்டலகேசியின் பாடல்களாக கருதப்படுகின்றன]


குண்டலகேசி பாடிய பாடல்கள்


அறுசீர் ஆசிரிய விருத்தம்


வெட்டிய கேசத் தோடும் விளங்குசேற்று உடிலனோடும்
முட்டரும் அரையின் மீது முடையுடைக் கந்தை தன்னை
இட்டமாய்த் திரிந்தேன் முன்னாள் இனியதை இன்னா என்றும்
மட்டரும் இன்னா உள்ள பொருளையும் இனுதஎன்றேனே.    1

நண்பகல் உறங்கும் சாலை நடுநின்றே வெளியே போந்தேன்
தன்புனல் கழுகுக் குன்றம் தனையடைந்து அலைந்த போது
நன்புடை அறவோர் கூட்டம் நடுவணே மாசில் தூயோன்
பண்புடைப் புத்தன் தன்னைப் பாவியேன் கண்டேன் கண்ணால்.    2

அண்ணலை நேரே கண்டேன் அவன்முனே முழந்தாள் இட்டு
மண்ணதில் வீழ்ந்து நைந்து வணங்கினேன் வணங்கி நிற்கத்
தண்ணவன் என்னை நோக்கித் தகவொரு பத்தா இங்கே
நண்ணுதி என்றே சாற்றி நாடரும் துறவை ஈந்தான்.    3

அலைந்துமே அங்கநாட்டோடு அண்டுமா மகத நாடு
மலைந்த பேர் வச்சி யோடு மன்னுகோ சலமும் காசி
நலந்தரு நாடு தோறும் நாடினேன் பிச்சைக் காக
உலைந்த இவ் ஐம்ப தாண்டில் எவர்க்குமே கடன்பட்டில்லேன்.    4

துறவியேன் பத்தா கட்டச் சீவரம் கொடுக்கும் மாந்தர்
முறையுடை மணத்தராகி நீள்புவி வாழ்ந்து நாளும்
குறைவில்நல் வினைகள் ஈட்டிக் கோதின் மெய் அறிவர் ஆகி
முறைமையாய் மலங்கள் நீங்கி முத்தியை அடைவார் திண்ணம்.    5



குண்டலகேசியிற் கிட்டியுள்ள செய்யுள்களின் தொகை முற்றிற்று.

Add a comment

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.

கடவுள் வாழ்த்து

  1. விழாவறை காதை
  2. ஊரலர் உரைத்த காதை
  3. மலர்வனம் புக்க காதை
  4. பளிக்கறை புக்ககாதை
  5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
  6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
  7. துயிலெழுப்பிய காதை
  8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
  9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
  10. மந்திரம் கொடுத்த காதை
  11. பாத்திரம் பெற்ற காதை
  12. அறவணர்த் தொழுத கதை
  13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
  14. பாத்திர மரபு கூறிய காதை
  15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
  16. ஆதிரை பிச்சையிட்ட காதை
  17. உலக அறவி புக்க காதை
  18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
  19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
  20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை
  21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
  22. சிறை செய் காதை
  23. சிறை விடு காதை
  24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
  25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
  26. வஞ்சி மாநகர் புக்க காதை
  27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
  28. கச்சி மாநகர் புக்க காதை
  29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
  30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
Add a comment

தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.

கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.

 

கடவுள் வாழ்த்து

[இளம்பூரனர் தொல்காப்பிய உரையில் செய்யுளியல்:98-அம் நூற்பாவுக்கும், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும் எடுத்த நூற்பெயரைக் குறிப்பிடாமல் இதை மேற்கோளாகக் காட்டுகிறனர்; நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148-ஆம் நூற்பாவின் உரையில் இதைக் காட்டி வளையாபதிச் செய்யுளென்று சொல்வதால் இது வளையாபதி என்று தெளிகிறது]

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
டிலக மாய திலறறி வனடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்(று)யான்.

புறத் திரட்டில் தொகுக்கப் பட்ட 66 செய்யுள்கள் பின்வருமாறு:

1.
வினைபல வலியி னாலே வேறுவே(று) யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரிய(து) ஆகும் தோன்றுதல், தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம்.

2.
உயர்குடி நனியுள் தோன்றல் ஊனமில் யாக்கை யாதல்
மயர்(வு)அறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
பெரி(து)உணர் அறிவே யாதல் பேரறம் கோடல் என்றாங்(கு)
அரி(து)இவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார்.

3.
நாடும் ஊரும் நனிபுகழ்ந்(து) ஏத்தலும்
பீ(டு)உ றும்மழை பெய்கெனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்(கு) ஆவதே.

4.
பள்ள முதுநீர்ப் பழகினும் மீன்இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்(பு)உறூஉம்
கள்அவிழ் கோதையர் காமனொ(டு) ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ.

5.
உண்டியுள் காப்(பு)உண்(டு) உறுபொருள் காப்புண்டு
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப(து) இலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்(று)அறிந் தோரே.

6.
எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனி உக்க மரத்(து)இலை நுண்மயிர்
அத்துனை யும்பிறர் அஞ்சொலி னார்மனம்
புக்கனம் என்று பொதியறைப் பட்டார்.

7.
தனிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்(று) ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார்.

8.
பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வசன வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.

9.
ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;
போக்கப் படுக்கும்; புலைநகரத்(து) உய்ப்பிக்கும்;
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்(கு)அல்ல(து) இல்லை நனிபேணும் ஆறே.

10.
தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்(பு)எதிர் கொள்பவே.

11.
பெண்ணின் ஆகிய பேரஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன(து) ஆயினும் ஏதில்பெண் நீக்குமின்.

12.
பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்
வையன் மின்;வடி(வு) அல்லன சொல்லிநீர்
உய்யன் மின்;உயிர் கொன்(று)உண்டு வாழும்நாள்
செய்யன் மின்;சிறி யாரொடு தீயன்மின்.

13.
கள்ளன் மின்,கள(வு) ஆயின யாவையும்;
கொள்ளன் மின்,கொலை கூடி வரும்அறம்;
எள்ளன் மின்,இலர் என்றெண்னி யாரையும்;
நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.

14.
துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த(து)
எற்றுக்(கு)அ·(து) என்னின் இதுவதன் காரணம்
அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணி(வு)என்னும் ஆறே.

15.
ஆற்று மின்,அருள் ஆருயிர் மாட்டெலாம்;
தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின்
மாற்று மின்கழி மாயமும் மானமும்
போற்று மின்பொரு ளாஇவை கொண்டுநீர்.

16.
பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா(து)
அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்
அருளைப் பொருளா அறம்செய்து வான்கண்
இருளியல் பெய்தாத(து) என்னோ நமரங்காள்.

17.
தகா(து)உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்
அவாவிலையின் உண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொருதுபிற ஊன்கொன்(று)
அவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும்.

18.
பிறவிக் கடலகத்(து) ஆராய்ந்(து) உணரின்
தெறுவதிற் குற்றம் இல்லார்களும் இல்லை
அறவகை யோரா விடக்கு மிசைவோர்
குறை(வு)இன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர்.

19.
உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்(து) உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்(து)ஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்.

20.
பொருளடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென்(று) இனிஇவண் வாரீர்
தெருளுதல் உறினும் தெருண்மின் அதுவே.

21.
தவத்தின் மேலுறை தவத்(து)இறை தனக்(கு)அல(து) அரிதே
மயக்கு நீங்குதல் மனமொழி யடுமெயிற் செறிதல்
உவத்தல் கய்தலொ(டு) இலாதுபல் வகைஉயிர்க்(கு) அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறிநீ.

22.
எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்;
உள்நின்(று) உருக்கும்; உரவோர்உரை கோடல் இன்றாம்
நண்ணின்றி யேயும்; நயவாரை நயந்து நிற்கும்;
கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும்.

23.
சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;
ஆன்(று)ஆங்(கு) அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்;
வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன்
தாந்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால்.

24.
மாஎன்(று) உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;
யஎன்(று) எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே
பேய்என்(று) எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்ப; காம
நோய்நன்(கு) எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால்.

25.
நக்கே விலாஇ றுவர்;நாணுவர்; நாணூம் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையு மேற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்;நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்பம் ஆக்கும்.

26.
அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவலை முன்கைப் புனையிழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே.

27.
பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்(து)
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே.

28.
பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்(டு)
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்(து)உறல் ஒன்(று)இன்றிக்
கௌவை இல்உல(கு) எய்துதல் கண்டதே.

29.
கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலி(வு) உண்மையும்
பொய்யில் பொய்யடு கூடுதற்(கு) ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்(து) ஓம்புமின்.

30.
உல(கு)உடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின்
நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும்
அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக்
கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார்.

31.
வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்
கள்வர்என்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை ஒட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வ மிகப்பவே.

32.
ஒழிந்த பிறவறன் உண்டென்பார் உட்க
அழிந்து பிறரவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தா(து) ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் பிலரே.

33.
இன்மை இளிவாம் உடைமை உயிர்க்(கு)அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை உறுக்கும் புரையில் அரும்பொருளைத்
துன்னா(து) ஒழிந்தார் துறவோ விழுமிதே.

34.
ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டா(து) ஒழிந்தார் விறலோ விழுமிதே.

35.
இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லையுண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வது மன்றே.

36.
வேற்கண் மடவார் விழை(வு)ஒழிய யாம்விழையக்
கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற்(று) உழையதா
நாற்ப(து) இகந்தாம் நரைத்தூதும் வந்த(து)இனி
நீத்தல் துணிவாம் நிலையா(து) இளமையே.

37.
இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையும் அ·தேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்(கு) என்றும்என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.

38.
மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல் பிறப்(பு)அறுக்கல்
உற்றார்க்(கு) உடம்பு மிகையவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலு மறுத்தற் கரிதே.


39.
உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்னொக்கும்
பற்றினான் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்(கு)உறும் ஆறே.

40.
தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கழி வெய்தினம்
நானம் தோய்குழல் நமக்(கு)உய்தல் உண்டோ
மானம்தீர் கொள்கையார் மாற்றம்பொய் அல்லவால்.

41.
பருவந்து சாலப் பலர்கொல்என்(று) எண்ணி
ஒருவந்தம் உள்ளத்(து) உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்(கு) உளன்என்னும் ஆறே.

42.
உய்த்தொன்றி யேர்தந் துழவுழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும்
யுய்த்தவம் இல்லான் பொருளடு போகங்கட்
கெய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே.

43.
செந்நெலங் கரும்பினொ(டு) இகலும் தீஞ்சுவைக்
கன்னலம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.

44.
குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ.

45.
கெட்டேம் இதுவெந் நிலையென்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரி(து)இகழ்ந்(து) ஆற்றவும்
எட்டவந் தோர்இடத்(து) ஏகிநிற்பவே.

46.
தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்(டு) ஈட்டற்(கு) இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்(து) ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்(பு)எண்ணும் ஆறே.

47.
நீண்முகை கையாற் கிழித்தது மொக்குறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற்
பேணலும் அன்பும் பிறந்(து)உழிப் பேதுசெய்(து)
ஆணைப்பெண் ணைய வணைக்குறு மாறே.

48.
அந்தகன் அந்தகற்(கு) ஆறு சொலல்ஒக்கும்
முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்(கு)அறி(வு) இல்லான் அதுவறி யாதவற்(கு)
இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே.

49.
யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை
வேறோர் இடத்து வெளிப்பட நன்றாம்.

50.
ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி
யாரவர் அடைந்தவர்க் கவையும் புரைப.

51.
வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறவறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.

52.
எங்ஙனம் ஆகிய(து) இப்பொருள் அப்பொருட்(கு)
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்(கு)
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.

53.
கரணம் பலசெய்து கையுற்(று) அவர்கட்
கரண மெனுமிலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்திற் றிரண்பொருள் கோடற்
கரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப.

54.
நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்(வு)எய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப.

55.
வனப்பிலர் ஆயினும் வன்மையி லோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப,

56.
தங்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வண்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்(கு)
அங்கண் பரப்பகத் தாழ்கல மொப்ப.

57.
ஒத்த பொருளான் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்(டு) ஒழுகலின்
பைத்தர அல்குல்பொற் பாவையி னல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.

58.
வீபொரு ளனை அகன்று பிறனுமோர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோற் புலம்புகு
மாவும் புரைப மலரன்ன கண்ணார்.

59.
நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்பிள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.

60.
முருக்(கு)அலர் போற்சிவந்(து) ஒள்ளிய ரேனும்
பருக்கர டில்லவர் பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொ லவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.

61.
மக்க்ள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்க(து) அறிந்தார் தலைமைக் குணமென்ப
பைத்(து)அர(வு) அல்குல் படிற்(று)உரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன்(று) இன்றே.

62.
நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
இவைமிகு பொருளென்(று) இறத்தல் இலரே
வகைமிகு வானுல(கு) எய்திவாழ் பவரே.

63.
பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
கொண்ட விரகர் குறிப்பினின் அ·குப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.

64.
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பாரல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ.

65.
தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப.

66.
பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்(சு)இல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையி தென்றே
மருள்இல் புலவர் மனம்கொண்(டு) உரைப்ப.

சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக வருவன:

67.
[சிலம்பு: கனாத்திறம்: 13-க்கு]

துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத்(து) இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்(து) உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்(டு) அமைவரப் பண்ணி.

68.
[சிலம்பு: கனாத்திறம்: 14-க்கு]

பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற்(று) அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணா(று) இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.

69.
[சிலம்பு: ஆய்ச்சியர்குரவை: 3-க்கு]

அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற்
கன்றின் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழற் கோவலர் ஆம்பலு
மொன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்.

யாப்பருங்கல உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டுவன:
[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு]
70.
நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலம் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே
காலக் கனலெரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவ(து) என்வாழி நெஞ்சே.

71.
வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே
உத்தம நன்னெறிக்கண் நின்(று)ஊக்கஞ் செய்தியேற்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.


வளையாபதியிற் கிட்டியுள்ள செய்யுள்களின் தொகை முற்றிற்று.

Add a comment

kannagi

 

 

பதிகம்

புகார்க் காண்டம்

 

மதுரைக் காண்டம்

 

வஞ்சிக் காண்டம்

 




Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework