சீவகன் வேடர்களுடன் போரிடுதல்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
| கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே. |
447 |
| கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம் ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார் மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே. |
448 |