அணிந்துரை


சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம்


தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தியோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்.

அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் 'மெய்யறிவு' நிலையில் மட்டுமல்லாமல், விஞ்ஞான அறிவிலும் தமிழ் தலைசிறந்து விளங்க வேண்டுமென விரும்புகிறார். அதனை பல்வேறு கோணங்களில் நின்று வெளியிட்டு தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்.

அறிவியற் கலைகளைப் பயிற்றுவிக்கும் கோயில்களான பல்கலைக் கழகங்களிலே இன்னமும் தமிழுக்கு இடமில்லை. அதாவது, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே அனைத்துப் பாடங்களிலும் தமிழில் போதிக்குங்கால், தமிழில் அறிவியல் நூல்கள் பெருகும். இந்தக் கொள்கையிலே நாங்கள் ஒன்றுபட்டவர்கள். இதனைச் சாதிக்க அரசின் துணை தேவைப்படுகிறது.

அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றபட இறையருள் கூட்டுவிக்குமாக!

நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக!

கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.

அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி. பதிப்பகத்தாருக்கு என் பாராட்டு.

ம. பொ. சிவஞானம்
சென்னை - 18 28-12-1992

 

பொருளடக்கம்

  1. அறிவியலும் அருளியலும்
  2. மானிடமும் மொழியும்
  3. குழந்தைகள்
  4. வான் மழை
  5. நீத்தார் பெருமை
  6. அறன் வலியுறுத்தல்
  7. முப்பால் அமைந்த திறன்
  8. வாழ்வாங்கு வாழ்வோம்!
  9. வாழ்க்கைத் துணை நலம்
  10. அறிவறிந்த மக்கட்பேறு
  11. அன்பு செய்க!
  12. மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை
  13. நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்
  14. ஒட்ட ஒழுகல்
  15. கற்புக்கடம் பூண்ட வாழ்க்கை
  16. வளரும் தலைமுறை
  17. அன்பாற்றல்
  18. மோப்பக் குழையும் அனிச்சம்!
  19. நன்றி மறவேல்
  20. மற்றவர் சிந்தனைக்கு மதிப்பு தருக!
  21. அடக்கமுடைமை ஆக்கம் தரும்
  22. நம் கடமை
  23. பொறையுடைமை
  24. அழுக்காறு தீண்டா உள்ளம் பெறுக!
  25. தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!
  26. பொறுமை போற்றுக!
  27. பொறாமை
  28. உழைத்து வாழ்க!
  29. நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!
  30. சார்புநிலை கூடாது!
  31. தன்னடக்கம்
  32. ஒழுக்கமுடைமை
  33. பொறுத்தாற்றும் பண்பு
  34. பொறுமை ஆக்கம் தரும்!
  35. பொறாமை கொள்ளற்க!
  36. நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!
  37. புறம் கூறல் தீது!
  38. பயனுடைய சொல்லையே சொல்லுக!
  39. தீயினும், தீமை தீது!
  40. ஒப்புரவு வாழ்க்கை
  41. கூட்டுறவு
  42. இரத்தல் தீது
  43. கோள் கேளற்க; சொல்லற்க!
  44. உண்மையான தவம்
  45. வாய்மையே பேசுக!
  46. வேண்டாம் சினம்!
  47. காத்துக் கொள்ளும் வழி
  48. கோபமா? வேண்டாம்!
  49. இன்னா செய்யாமை
  50. நன்றி பாராட்டுக!
  51. நடுவு நிலைமை
  52. உழைத்து உண்க!
  53. சிறப்பு செய்தொழிலாலல்ல!
  54. எளிய வாழ்வியல் உண்மை!
  55. நாள் எனும் வாள்!
  56. அன்பு ஈனும் ஆர்வம்
  57. "மெய்ப்பொருள் காண்பதறிவு"
  58. ஆன்மாவின் உணவு!
  59. அறிவு
  60. நலமுற வாழ்வோம்
Add a comment

உட்பிரிவுகள்

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework