பெருந் தோள் நெகிழ அவ் வரி வாட
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர
இன்னேம் ஆக எற் கண்டு நாணி
நின்னொடு தௌ த்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்புமதி வாழிய நீ என
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ தோழி
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து
தோழி இவள் ஆற்றா ளாயினாள் இவளை இழந்தேன்
எனக் கவன்றாள் வற்புறுத்தது அக்காலத்து ஆற்றாளாய்
நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்

Add a comment

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி தாது உக
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அ·து
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்
கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடலகொல்லோ தாமே அவன் மலைப்
போருடை வருடையும் பாயா
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று
தலைமகன் குறிப்பின் ஓடியது

Add a comment

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினைஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப
பைந் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி
தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ
எம்பெருமான் கவலாது செல்வது யான் ஆற்றுவிக்குமிடத்துக்
கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது கையுறை நேர்ந்த
தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉம் ஆம்

Add a comment

வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை ஆயின்
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும் கொண்டும்
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது

Add a comment

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க
பனியின் வாடையடு முனிவு வந்து இறுப்ப
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப
உயிர் செலத் துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியடு ஒருங்கு தலைவரினே
தலைமகள் பிரிவிடை மெலிந்தது

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework