தோளும் அழியும் நாளும் சென்றென
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற
தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு
ஆற்றுவல் என்பது படச் சொல்லியது

Add a comment

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட
நின்ற தலைமகளைத் தோழி எம்பெருமான்
இதற்காய நல்லது புரியும் என்று தலைமகன்
சிறைப்புறத்தானாகச் சொல்லியது இதற்காய
நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்
என்றாட்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

Add a comment

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே
பல் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்
சென்மோ சேயிழை என்றனம் அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல் சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே
முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை
நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி எனச் சொல்லியது

Add a comment

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர
நினின்று அமைகுவென்ஆயின் இவண் நின்று
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாதாங்கு சிறந்த
கேண்மையடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது முன்பு நின்று
யாதோ புகழ்ந்தவாறு எனின் நின் இன்று
அமையாம் என்று சொன்னமையான் என்பது

Add a comment

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தௌ ர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர
சென்றிசின் வாழியோ பனிக் கடு நாளே
இடைச் சுரத்து எழிலி உறைத்தென மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல் நோகோ யானே
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச்
சுரத்துக் கண்டார் சொல்லியது வன்சொல்லால் குறை
நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework