பெயர் - வளனறு பைதிரம் (18)
துறை - பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
கொள்ளை வல்சிக் கவர்கால் கூளியர்
கல்உடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
ஒண்பொறிக் கழல்கால் மாறா வயவர்
தின்பிணி எஃகம் புலிஉறை கழிப்பச்
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசம் கண்பெயர்த்(து) இயவர்
கடிப்(பு)உடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச
வம்புகளை(வு) அறியாச் சுற்றமோ(டு) உடம்புதொ஢ந்(து)
அவ்வினை மேவலை ஆகலின் 10
எல்லும் நனிஇருந்(து) எல்லிப் பெற்ற
அ஡஢துபெறு பாயல்சிறுமகி ழானும்
கனவினுள் உறையும் பெருஞ்சால்(பு) ஒடுங்கிய
நாணுமலி யாக்கை வாள்நுதல் அ஡஢வைக்(கு)
யார்கொல் அளியை 15
இனம்தோ(டு) அகல ஊருடன் எழுந்து
நிலம்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்தல் ஈயா *வளன்அறு பைதிரம்*
அன்ன ஆயின பழனம் தோறும்
அழல்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து 20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அ஡஢நர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்றோர் காலை
நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக் 25
காணுநர் கைபுடைத்(து) இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.


Add a comment
பெயர் - கூந்தல் விறலியர் (6) துறை - இயன்மொழி வாழ்த்து தூக்கு - செந்தூக்கு வண்ணம் - ஒழுகு வண்ணம் உண்மின் கள்ளே அடுமின் சோறே எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே வருநர்க்கு வரையாது பொலம்கலம் தெளிர்ப்ப இருள்வணர் ஒலிவரும் பு஡஢அவிழ் ஐம்பால் ஏந்துகோட்(டு) அல்குல் முகிழ்நகை மடவரல் 5 *கூந்தல் விறலியர்* வழங்குக அடுப்பே பெற்ற(து) உதவுமின் தப்(பு)இன்று பின்னும் மன்உயிர் அழிய யாண்டுபல துளக்கி மண்உடை ஞாலம் புர(வு)எதிர் கொண்ட தண்இயல் எழிலி தலையாது மாறி 10 மா஡஢ பொய்க்குவ(து) ஆயினும் சேர லாதன் பொய்யலன் நசையே. Add a comment
பெயர் - துயிலின் பாயல் (18)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்

கோ(டு)உறழ்ந்(து) எடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சுமரக் குழாஅம் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல்எழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லு(பு) 5
ஏனம் ஆகிய நுனைமு஡஢ மருப்பின்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொல் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை ஆகலின் காண்குவந் திசினே
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் 10
ஊடினும் இனிய கூறும் இன்நகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உ஡஢யள்
பாயல் உய்யுமோ தோன்றல் தாவின்று
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் 15
வயங்குகதிர் வயிரமோ(டு) உறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
புரையோர் உண்கண் *துயிலின் பாயல்*
பாலும் கொளாலும் வல்லோய்நின்
சாயன் மார்பு நனிஅலைத் தன்றே. 20
Add a comment
பெயர் - வலம்படு வியன்பணை (5)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பொ஢ய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்(பு)அறுத்(து) இயற்றிய *வலம்படு வியன்பணை* 5
ஆடுநர் பெயர்ந்துவந்(து) அரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்உறூஉம் தொடித்தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனம்தலைப் பைஞ்ஞிலம் வருகஇந் நிழல்என
ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின் 10
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
கடும்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே.


Add a comment
பெயர் - நிரைய வெள்ளம் (4)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்து
முனைஎ஡஢ பரப்பிய துன்னரும் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதில்மரம் முருக்கி
நிரை களிறுஒழுகிய *நிரைய வெள்ளம்*
பரந்(து)ஆடு கழங்(கு)அழி மன்மருங்(கு) அறுப்பக் 5
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கின் உருஅறக் கெடுத்துத்
தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீர்இவர்பு பரந்த நீர்அறு நிறைமுதல் 10
சிவந்த காந்தள் முதல்சிதை மூதின்
புலவுவில் உழவின் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பின் புலம்சிதை அரம்பின்
அறியா மையான் மறந்துதுப்(பு) எதிர்ந்தநின்
பகைவர் நாடும் கண்டுவந் திசினே 15
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்நாட்டு
விழ(வு)அறு(பு) அறியா முழ(வு)இமிழ் மூதூர்க்
கொடுநிழல் பட்ட பொன்உடை நியமத்துச்
சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின் 20
வயவர் வேந்தே பா஢சிலர் வெறுக்கை
தார்அணிந்(து) எழிலிய தொடிசிதை மருப்பின்
போர்வல் யானைச் சேர லாத
நீவா ழியர்இவ் வுலகத் தோர்க்(கு)என
உண்(டு)உரை மாறிய மழலை நாவின் 25
மென்சொல் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற(வு) அறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோ(டு)
ஒன்றுமொழிந்(து) அடங்கிய கொள்கை என்றும்
பதிபிழைப்(பு) அறியாது துய்த்தல் எய்தி 30
நிரையம் ஒ஡ணஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறந் தருதலின் நோய்இகந்(து) ஒ஡ணஇய
யாணர்நன் நாடுங் கண்டுமதி மருண்டனென்
மண்உடை ஞாலத்து மன்னுயிர்க்(கு) எஞ்சா(து) 35
ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்
புரைவயின் புரைவயின் பொ஢ய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்இசை
ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே. 40


Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework