- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிறந்திகழ் பாசிழை
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்
பிறர்உவமம் ஆகா ஒருபெரு வேந்தே
.............................
.............................
மருதம் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் 5
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவி மண்டிய சேய்வி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழைவிந்(து) எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக் 10
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய!நின்
வளனும் ஆண்மையும் கைவண் மையும்
மாந்தர் அள(வு)இறந் தனஎனப் பல்நாள்
யான்சென்(று) உரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென 15
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்(கு)உரைப் பேன்என வருந்துவல் யானே.
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிறந்திகழ் பாசிழை
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்
பிறர்உவமம் ஆகா ஒருபெரு வேந்தே
.............................
.............................
மருதம் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் 5
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவி மண்டிய சேய்வி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழைவிந்(து) எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக் 10
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய!நின்
வளனும் ஆண்மையும் கைவண் மையும்
மாந்தர் அள(வு)இறந் தனஎனப் பல்நாள்
யான்சென்(று) உரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென 15
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்(கு)உரைப் பேன்என வருந்துவல் யானே.
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: உருத்(து)எழு வெள்ளம்
இகல்பெரு மையின் படைகோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறி(து)உடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்திணை முதல்வர்க்(கு) ஓம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவுவலி உறுத்து 5
நன்(று)அறி உள்ளத்துச் சான்றோர் அன்னநின்
பண்புநன்(கு) அறியார் மடம்பெரு மையின்
துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை ஒராஅநீர் ஞெமரவந்(து) ஈண்டி
உரவுத்திரை கடுகிய *உருத்(து)எழு வெள்ளம்* 10
வரையா மாதிரத்(து) இருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்(து)
அஞ்சாறு புரையும் நின்தொழில் ஒழித்துப்
பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயிஅ அனையை 15
சினம்கெழு குருசில்நின் உடற்றிசி னோர்க்கே.
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: உருத்(து)எழு வெள்ளம்
இகல்பெரு மையின் படைகோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறி(து)உடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்திணை முதல்வர்க்(கு) ஓம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவுவலி உறுத்து 5
நன்(று)அறி உள்ளத்துச் சான்றோர் அன்னநின்
பண்புநன்(கு) அறியார் மடம்பெரு மையின்
துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை ஒராஅநீர் ஞெமரவந்(து) ஈண்டி
உரவுத்திரை கடுகிய *உருத்(து)எழு வெள்ளம்* 10
வரையா மாதிரத்(து) இருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்(து)
அஞ்சாறு புரையும் நின்தொழில் ஒழித்துப்
பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயிஅ அனையை 15
சினம்கெழு குருசில்நின் உடற்றிசி னோர்க்கே.
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
வெருவரு தானை கொடுசெருப் பலகடந்(து) 5
ஏத்தல் சான்ற இடன்உடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன்உறப் பெற்றவற்(கு)
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி 10
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக்கடுங்கோ வாழிஆதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்ஞெழுஞாலம், பறைக்குரலருவி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி நின்று தன்கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
Add a comment
நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
வெருவரு தானை கொடுசெருப் பலகடந்(து) 5
ஏத்தல் சான்ற இடன்உடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன்உறப் பெற்றவற்(கு)
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி 10
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக்கடுங்கோ வாழிஆதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்ஞெழுஞாலம், பறைக்குரலருவி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி நின்று தன்கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: குறுந்தாள் ஞாயில்
அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக(டு) உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக் 5
கடுந்தே(று) உறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளம்துணை மகான்
அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே
ஊர்எ கவர உருத்(து)எழுந்(து) உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப 10
மதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய *குறுந்தாள் ஞாயில்*
ஆர்எயல் தோட்டி வெளவினை ஏறொடு
கன்(று)உடை ஆயம் தாணஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப 15
மத்துக்கயி(று) ஆடா வைகல்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபாழ் ஆகா வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென
அரும்சமத்(து) அருநிலை தாங்கிய புகர்நுதல் 20
பெரும்களிற்(று) யானையொ(டு) அரும்கலம் தராஅர்
மெய்பனி கூரா அணங்(கு)எனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி
உரவரும் மடவரும் அறிவுதொந்(து) எண்ணி 25
அறிந்தனை அருளாய் ஆயின்
யார்இவண் நெடுந்தகை வாழு மோரே.
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: குறுந்தாள் ஞாயில்
அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக(டு) உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக் 5
கடுந்தே(று) உறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளம்துணை மகான்
அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே
ஊர்எ கவர உருத்(து)எழுந்(து) உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப 10
மதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய *குறுந்தாள் ஞாயில்*
ஆர்எயல் தோட்டி வெளவினை ஏறொடு
கன்(று)உடை ஆயம் தாணஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப 15
மத்துக்கயி(று) ஆடா வைகல்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபாழ் ஆகா வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென
அரும்சமத்(து) அருநிலை தாங்கிய புகர்நுதல் 20
பெரும்களிற்(று) யானையொ(டு) அரும்கலம் தராஅர்
மெய்பனி கூரா அணங்(கு)எனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி
உரவரும் மடவரும் அறிவுதொந்(து) எண்ணி 25
அறிந்தனை அருளாய் ஆயின்
யார்இவண் நெடுந்தகை வாழு மோரே.
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: பறைக்குரல் அருவி
களிறுகடைஇய தாள்
மாஉடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்அலைத்த தோள்
வில்அலைத்த நல்வலத்து 5
வண்(டு)இசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீம்சுனை நீர்மலர் மலைந்து மதம்செருக்கி
உடைநிலை நல்அமர் கடந்து மறம்கெடுத்துக்
கடும்சின வேந்தர் செம்மல் தொலைத்த 10
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறம்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்(பு)இறை கொண்ட கமழும் சுடர்நுதல் 15
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கை சுற்றம் சுற்ற
வேள்வியின் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்நிலை உலகத்(து) ஐயர்இன்(பு) உறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 20
இளம்துணைப் புதல்வான் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழும்என இழிதரும் *பறைக்குரல் அருவி*
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25
அயிரை நெடுவரை போலத்
தொலையா(து) ஆகநீ வாழும் நாளே.
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: பறைக்குரல் அருவி
களிறுகடைஇய தாள்
மாஉடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்அலைத்த தோள்
வில்அலைத்த நல்வலத்து 5
வண்(டு)இசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீம்சுனை நீர்மலர் மலைந்து மதம்செருக்கி
உடைநிலை நல்அமர் கடந்து மறம்கெடுத்துக்
கடும்சின வேந்தர் செம்மல் தொலைத்த 10
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறம்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்(பு)இறை கொண்ட கமழும் சுடர்நுதல் 15
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கை சுற்றம் சுற்ற
வேள்வியின் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்நிலை உலகத்(து) ஐயர்இன்(பு) உறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 20
இளம்துணைப் புதல்வான் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழும்என இழிதரும் *பறைக்குரல் அருவி*
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25
அயிரை நெடுவரை போலத்
தொலையா(து) ஆகநீ வாழும் நாளே.