- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: உரைசால்வேள்வி
வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம
அறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
*உரைசால் வேள்வி* முடித்த கேள்வி
அந்தணர் அரும்கலம் ஏற்ப நீர்பட்(டு) 5
இரும்சே(று) ஆடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்
புறம்சிறை வயியர்க் காணின் வல்லே
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழைஅணிந்(து) ஈம்என 10
ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மாஇரு விசும்பில் பல்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல் 15
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப்(பு) உற்ற தோற்றமொ(டு) உயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி அதனால்
பசிஉடை ஒக்கலை ஒணஇய
இசைமேம் தோன்றல்நின் பாசறை யானே. 20
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: உரைசால்வேள்வி
வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம
அறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
*உரைசால் வேள்வி* முடித்த கேள்வி
அந்தணர் அரும்கலம் ஏற்ப நீர்பட்(டு) 5
இரும்சே(று) ஆடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்
புறம்சிறை வயியர்க் காணின் வல்லே
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழைஅணிந்(து) ஈம்என 10
ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மாஇரு விசும்பில் பல்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல் 15
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப்(பு) உற்ற தோற்றமொ(டு) உயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி அதனால்
பசிஉடை ஒக்கலை ஒணஇய
இசைமேம் தோன்றல்நின் பாசறை யானே. 20
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: அருவி ஆம்பல்
பார்ப்பார்க்(கு) அல்லது பணி(பு)அறி யலையே
பணியா உள்ளமொ(டு) அணிவரக் கெழீஇ
நட்டோ ர்க்(கு) அல்லது கண்அஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணம்கமழ் அகலம்
மகளிர்க்(கு) அல்லது மலர்ப்(பு)அறி யலையே 5
நிலம்திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்(பு)அறி யலையே
சிறிஇலை உழிஞைத் தொயல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி 10
ஒருமுற்(று) இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற்(று) அழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர் நீயும்
நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால் 15
செல்வக் கோவே சேரலர் மருக
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனம்தலை உலகஞ் செய்தநன்(று) உண்(டு)எனின்
அடைஅடுப்(பு) அறியா *அருவி ஆம்பல்*
ஆயிர வெள்ள ஊழி 20
வாழி யாத வாழிய பலவே.
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: அருவி ஆம்பல்
பார்ப்பார்க்(கு) அல்லது பணி(பு)அறி யலையே
பணியா உள்ளமொ(டு) அணிவரக் கெழீஇ
நட்டோ ர்க்(கு) அல்லது கண்அஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணம்கமழ் அகலம்
மகளிர்க்(கு) அல்லது மலர்ப்(பு)அறி யலையே 5
நிலம்திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்(பு)அறி யலையே
சிறிஇலை உழிஞைத் தொயல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி 10
ஒருமுற்(று) இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற்(று) அழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர் நீயும்
நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால் 15
செல்வக் கோவே சேரலர் மருக
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனம்தலை உலகஞ் செய்தநன்(று) உண்(டு)எனின்
அடைஅடுப்(பு) அறியா *அருவி ஆம்பல்*
ஆயிர வெள்ள ஊழி 20
வாழி யாத வாழிய பலவே.
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: புலாஅம் பாசறை
பலாஅம் பழுத்த பசும்புண் அயல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள் கணவன்
பொன்னின் அன்ன பூவின் சிறிஇலைப் 5
புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பா
முழவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்(க)என 10
இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்த(து) இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்
நல்இசை தரவந் திசினே ஒள்வாள்
உரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை* 15
நிலவின்அன்ன வெள்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்னநின் கலிமகி ழானே.
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: புலாஅம் பாசறை
பலாஅம் பழுத்த பசும்புண் அயல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள் கணவன்
பொன்னின் அன்ன பூவின் சிறிஇலைப் 5
புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பா
முழவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்(க)என 10
இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்த(து) இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்
நல்இசை தரவந் திசினே ஒள்வாள்
உரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை* 15
நிலவின்அன்ன வெள்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்னநின் கலிமகி ழானே.
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வரைபோல் இஞ்சி
இழைஅணிந்(து) எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
மழைஎன மருளும் மாஇரும் பஃறோல்
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடு
மைந்(து)உடை ஆர்எயில் புடைபட வளைஇ
வந்துபுறத்(து) இறுக்கும் பசும்பிசிர் ஒள்அழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ்(பு) இழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
புனல்பொரு கிடங்கின் *வரைபோல் இஞ்சி* 10
அணங்(கு)உடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பி
வளன்உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன்அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி 15
அயல் ஆர்கை வன்கை வினைநர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வாவண்(டு) ஓப்பும்
பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே.
Add a comment
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வரைபோல் இஞ்சி
இழைஅணிந்(து) எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
மழைஎன மருளும் மாஇரும் பஃறோல்
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடு
மைந்(து)உடை ஆர்எயில் புடைபட வளைஇ
வந்துபுறத்(து) இறுக்கும் பசும்பிசிர் ஒள்அழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ்(பு) இழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
புனல்பொரு கிடங்கின் *வரைபோல் இஞ்சி* 10
அணங்(கு)உடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பி
வளன்உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன்அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி 15
அயல் ஆர்கை வன்கை வினைநர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வாவண்(டு) ஓப்பும்
பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே.
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து 5
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வான் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின் 10
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர்திங்கள், மரம்படுதீங்கனி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நூறயிரங்காணமும் கொடுத்துத் தன்பக்கத்துக்கொண்டான் அக்கோ.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பதெட்டியாண்டு வீற்றிருந்தான்.
Add a comment
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து 5
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வான் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின் 10
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர்திங்கள், மரம்படுதீங்கனி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நூறயிரங்காணமும் கொடுத்துத் தன்பக்கத்துக்கொண்டான் அக்கோ.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பதெட்டியாண்டு வீற்றிருந்தான்.