மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல்பாடு உலந்தன்றே, பறைக்குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக்
காடே கம்மென் றன்றே; அவல, 5
கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவுநடை
அண்ணல்இரலை அமர்பிணை தழீஇத்,
தண்அறல் பருகித் தாழ்ந்துபட் டனவே;
அனையகொல் - வாழி, தோழி!- மனைய 10
தாழ்வின் நொச்சி. சூழ்வன மலரும்
மௌவல். மாச்சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச்செய் பொருளே!

Add a comment

வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்தவளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தலைபிணி அவிழா, சுரிமுகப் பகன்றை
சிதரல்அம் துவலை தூவலின், மலரும்
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள், 5
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல்இடத்து ஒழுகி,
மங்குல் மாமழை, தென்புலம் படரும்
பனிஇருங் கங்குலும் தமியள் நீந்தி,
தம்ஊ ரோளே, நன்னுதல்; யாமே 10
கடிமதில் கதவம் பாய்தலின், தொடிபிளந்து
நுதிமுகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச்,
சிறுகண் யானை நெடுநா ஒண் மணி,
கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பு,
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, . 15
கழித்துஉறை செறியா வாளுடை எறுழ்த்தோள்,
இரவு துயில் மடிந்த தானை,
உரவுச்சின வேந்தன் பாசறை யேமே!

Add a comment

கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்றமீன்முள் அன்ன, வெண்கால் மாமலர்
பொய்தல் மகளிர் விழவுஅணி கூட்டும்
அவ்வயல் தண்ணிய வளம்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ - தோழி! - அல்கல் 5
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியின் ஏர ஆகி,
'மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம்மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே ; இனியே
புதல்வற் றடுத்த பாலொடு தடஇத்
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே 15
தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி, மதவுநடைச்
செவிலி கைஎன் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் ; இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்' என, மெல்லஎன் 20
மகன் வயின் பெயர்தந் தேனே; அதுகண்டு
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்
சிறுபுறம் கவையின னாக, உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பலஉழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே .
நெஞ்சுஅறை போகிய அறிவி னேற்கே?

Add a comment

"நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅயஅவிர்அறல் கொண்ட விரவுமணல் அகன்துறைத்
தண்கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்,
வதுவை நாற்றம் புதுவது கஞல, 5
மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில்
படுநா விளியா னடுநின்று, அல்கலும்,
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் 10
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன,
இகழுநர் இகழா இளநாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீநின்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
வாரா மையின் புலர்ந்த நெஞ்சமொடு, 15
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!" என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி - தோழி - பொருநர்
செல்சமம் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன் 20
இன்இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரோ!

Add a comment

முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;தலைமுடி சான்று; தண்தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 5
பேதை அல்லை - மேதையம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என,
ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி,
தன்சிதைவு அறிதல் அஞ்சி-இன்சிலை
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!- 10
வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவில் வெள்வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந் தோளே; ஆயிடை,
அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி 15
மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை,
நின்னொடு வினவல் கேளாய்;- பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி,
ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்,
ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த 20
துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework