391. முயங்காக்காற் பாயும் பசலைமற் று஡டி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
புல்லாப் புலப்பதோர் ஆறு.

392. தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

394. செல்சுடர் நோக்கிச் சிதரா஢க்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேல் கிடந்து.

395. கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல் - பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக் கறிந்து.

396. அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்த
பஞ்சிகொண் டுட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.

397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பி஡஢வுள்ளி
மாலை பா஢ந்திட் டழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.

398. கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி - சுடர்த்தொடீஇ
பெற்றா னொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃது஡ரும் ஆறு.

399. முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை ஦வ்ருஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி.

400. கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework