கண்டிசின்- மகளே!- கெழீஇ இயைவெனைஒண்தொடி செறித்த முன்கை ஊழ்கொள்பு
மங்கையர் பலபா ராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம்பால் உண்ணா மயிலியற்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா 5
தாழியும் மலர்பல அணியா கேழ்கொளக்
காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்
பாவையும் பலிஎனப் பெறாஅ நோய்பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் 'தொடியோய்! 10
இன்றுநின் ஒலிகுரல் மண்ணல்' என்றதற்கு,
எற்புலந்து அழிந்தன ளாகித் தற்றகக்
கடல்அம் தானைக் கைவண் சோழர்
கெடல்அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்கர்ப் புதுவது புனைந்து 15
தமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக்காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த 20
சிறியோற்கு ஒத்தஎன் பெருமடத் தகுவி
'சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்?' என நோவல் யானே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework