நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சிஇனம்தலைத் தரூஉம் எறுழ்கிளர் முன்பின்,
வரிஞிமிறு ஆர்க்கும், வாய்புகு கடாஅத்துப்
பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்
இரும்பிணர்த் தடக்கையில், ஏமுறத் தழுவ, 5
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்,
தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய்மலர் உதிரக், காந்தள்
நீடுஇதழ் நெடுந்துடுப்பு ஒசியத், தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், 10
நம்இல் புலம்பின், நம் ஊர்த் தமியர்
என்ஆ குவர்கொல் அளியர் தாம்?' என
எம்விட்டு அகன்ற சின்னாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ - ஓங்குமலை நாட!
உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்இசை 15
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டுபல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
ஆள்இடூஉக் கடந்து, வாள்அமர் உழக்கி, 20
ஏந்துகோட்டு யானை வேந்தர்ஓட்டிய
நெடும்பரிப் புரவிக் கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம்கமழ் புதுமலர் நாறும் - இவள் நுதலோ?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework