ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல நின் வாய் சொல்;பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்? கேள், இனி;
ஏந்தி, எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்!
குதிரை வழங்கி வருவல்;
அறிந்தேன், குதிரை தான்!
பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர்க் கொய் சுவல்,
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்
ஞால் இயல் மெல் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறை ஆகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக் காழ்ப் பல் பல கண்டிகைத்,
தார் மணி பூண்ட தமனிய மேகலை,
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி, நீ,
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்,
ஆதி கொளீஇய, அசையினை ஆகுவை,
வாதுவன்; வாழிய நீ;
சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண்
குதிரையோ, வீறியது?
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது; நன்றே
கோரமே - வாழி! - குதிரை;
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்தக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க் கண்
குதிரையோ, கவ்வியது?
சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே
வியமமே வாழி! - குதிரை;
மிக நன்று; இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை;
பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர்
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி
உரு அழிக்கும் அக் குதிரை ஊரல்; நீ ஊரின், பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச்சார்த்
திரி, குதிரை ஏறிய செல்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework