கானல் மாலைக் கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி
ஆர் உயிர் அழிவதுஆயினும் நேரிழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி
நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள்
ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework