இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இருங் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே
உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன்
குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework