151. அங்கண் விசும்பின் அகனிலாப் பா஡஢க்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.

152. இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நா஢மா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அ஡஢மாப் பிழைப்பெய்த கோல்?

153. நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார் - உரங்கவறா
உள்ளமெனும் நா஡஢னால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.

154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் பு஡஢ந்தியாப்பர்
நல்வரை நாட. சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி.

155. புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பா஢ந்து.

156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நு஡றி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.

157. கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொ஡ணஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும்
வாயில்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயிற் பா஢வ திலர்.

158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலா ஡஢ற்கண், குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.

159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விமுமியோர்
காண்டொறும் செய்வர் சிறப்பு.

160. உடையார் இவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வா - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework