இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்நன்பகல் அமையமும் இரவும் போல
வேறுவேறு இயல ஆகி மாறெதிர்ந்து
உளவென உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத் 5
துன்னலும் தகுமோ?- துணிவில் நெஞ்சே!-
நீசெல வலித்தனை ஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மோ- கனைகதிர்
ஆவி அவ்வரி நீரென நசைஇ
மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனந்தலைக் 10
களர்கால் யாத்த கண்ணகன் பரப்பிற்
செவ்வரை கொழிநீர் கடுப்ப அரவின்
அவ்வரி உரிவை அணவரும் மருங்கிற்
புற்றரை யாத்த புலர்சினை மரத்த
மைந்நிற உருவின் மணிக்கட் காக்கை 15
பைந்நிணங் கவரும் படுபிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்
கோல்கழிபு இரங்கும் அதர
பேய்பயில் அழுவம் இறந்த பின்னே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework