அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல்லகம் வடுக்கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே!
பெருந்திரை முழக்கமொடு இயக்குஅவிந் திருந்த 5
கொண்டல் இரவின் இருங்கடன் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடுஇயல் யானை அணிமுகத்து அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் 10
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்,
பரியுடை நற்றோர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானற் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன்ஒலித் தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய - தண்புலர் 15
வைகுறு விடியற் போகிய எருமை
நெய்தல்அம் புதுமலர் மாந்தும்
கைதைஅம் படப்பைஎம் அழுங்கல் ஊரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework