கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ் சேற்று அயிரை தேரிய தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின் நசை பழுதாக
பெருங் கையற்ற என் சிறுமை பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய
தலைமகள் சொல்லியது தோழி தலைமகளுக்குச்
சொல்லுவாளாய் தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework