இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அருங்கடிப் படுத்தனை ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை கருந் தாள்
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து
சிறு தினை வியன் புனம் காப்பின்
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே
தோழி அருகு அடுத்தது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework