குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
தண் கார் தலைஇய நிலம் தணி காலை
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை
இன்று நக்கனைமன் போலா என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல்
மட மா அரிவை தட மென் தோளே
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework