கொடியை வாழி தும்பி இந் நோய்
படுகதில் அம்ம யான் நினக்கு உரைத்தென
மெய்யே கருமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக்
கழிந்து பொருள்வயிற் பிரியஆற்றளாகிய
தலைமகள் தும்பிக்குச் சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework