கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும்
எம் விட்டு அகறிர்ஆயின் கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே
தலைமகனைச் செலவுடன்பட்டது கடிநகர்
வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி
நும்மாலே ஆயிற்று என்று சொல்லியதூஉம் ஆம்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework