- விவரங்கள்
- பெருவாயின் முள்ளியார்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- ஆசாரக்கோவை
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து
- விவரங்கள்
- பெருவாயின் முள்ளியார்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- ஆசாரக்கோவை
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.
- விவரங்கள்
- பெருவாயின் முள்ளியார்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- ஆசாரக்கோவை
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.
- விவரங்கள்
- பெருவாயின் முள்ளியார்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- ஆசாரக்கோவை
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
- விவரங்கள்
- பெருவாயின் முள்ளியார்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- ஆசாரக்கோவை
எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.