விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாம் ஒழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின்
மதியுண்டை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே. .. 292
கொளு
அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
வெறி விலக்கப் பிறிதுரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework