162.
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங்(கு) ஒழுகுபவே
'வெந்நீரின் தண்ணீர் தெளித்து'.
163.
தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்(டு) - ஏமாப்ப
முன்ஓட்டுக் கொண்டு முரண்அஞ்சிப் போவாரே
'உண்ஒட்(டு) அகல்உடைப் பார்'.
164.
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவா துவப்பவே கொள்க
வரையக நாட! 'விரைவிற் கருமம்
சிதையும் இடராய் விடும்'.
165.
நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்(று)
உளைய உரையார் உறுதியே கொள்
வளையொலி ஐம்பாலாய் ! வாங்கி இருந்து
'தொளையெண்ணார் அப்பந்தின் பார்'.
166.
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்
'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.
167.
மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும் - கொடியன்னாய்!
பாரித் தவனை நலிந்து தொழில்கோடல்
'மூரி உழுது விடல்'.
168.
ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும்
பாணித்தே செய்ய வியங்கொள்ளின் - காணி
பயவாமல் செய்வாரார் 'தஞ்சாகா டேனும்
உயவாமல் சேறலோ இல்'.
169.
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
'தட்டாமல் செல்லாது உளி'.
170.
காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கென்றே அமர்ந்திருத்தல்
மாப்புரை நோக்கின் மயிலன்னாய் ! 'பூசையைக்
காப்பிடுதல் புன்மீன் தலை'.
171.
தெற்ற அறிவுடையார்க்(கு) அல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமம் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
'மற்றதென் பாற்றேம்பல் நன்று'.
172.
உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
'இழவன்று எருதுண்ட உப்பு'.
173.
கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை 'இல்லையே
அட்டாரை ஒட்டாக் கலம்'.
174.
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
காட்டிக் களைதும் எனவேண்டா - ஓட்டி
இடம்பட்ட கண்ணாய் ! 'இறக்கும்மை யாட்டை
உடம்படுத்து வெளவுண்டார் இல்'.
175.
அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால் - இகந்து
நினைந்து தெரியானாய் 'நீள்கயத்துள் ஆமை
நனைந்துவா என்று விடல்'.
176.
உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்
நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு
கரையிருந் தார்க்கெளிய போர்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework