விளிமரபு
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: சங்க இலக்கியம்
- தொல்காப்பியம்
விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய என்ப. |
1 |
அவ்வே, இவ் என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப. |
2 |
அவைதாம், இ உ ஐ ஓ என்னும் இறுதி அப் பால் நான்கே உயர்திணை மருங்கின் மெய்ப் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே.3 |
|
அவற்றுள், இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும். |
4 |
ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். | 5 |
உகரம்தானே குற்றியலுகரம். | 6 |
ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம் விளி கொள்ளா என்மனார் புலவர். |
7 |
அளபெடை மிகூஉம் இகர இறு பெயர் இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. |
8 |
முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி ஆவொடு வருதற்கு உரியவும் உளவே. |
9 |
அண்மைச் சொல்லே இயற்கை ஆகும். | 10 |
ன ர ல ள என்னும் அந் நான்கு என்ப புள்ளி இறுதி விளி கொள் பெயரே. |
11 |
ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா. | 12 |
அன் என் இறுதி ஆ ஆகும்மே. | 13 |
அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும். | 14 |
ஆன் என் இறுதி இயற்கை ஆகும். | 15 |
தொழிலின் கூறும் ஆன் என் இறுதி ஆய் ஆகும்மே விளிவயினான. |
16 |
பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. | 17 |
அளபெடைப் பெயரே அளபெடை இயல. | 18 |
முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே. | 19 |
தான் என் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யான் என் பெயரும் வினாவின் பெயரும் அன்றி அனைத்தும் விளி கோள் இலவே. |
20 |
ஆரும் அருவும் ஈரொடு சிவணும். | 21 |
தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும் வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே. |
22 |
பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. | 23 |
அளபெடைப் பெயரே அளபெடை இயல. | 24 |
சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன. | 25 |
நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும். |
26 |
எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும். |
27 |
அயல் நெடிது ஆயின் இயற்கை ஆகும். | 28 |
வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆள் என் இறுதி ஆய் ஆகும்மே விளிவயினான. |
29 |
முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல. | 30 |
சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முன் கிளந்தன்ன என்மனார் புலவர். |
31 |
அளபெடைப் பெயரே அளபெடை இயல. | 32 |
கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்கும் காலை. |
33 |
புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின் தெளி நிலை உடைய ஏகாரம் வரலே. |
34 |
உள எனப்பட்ட எல்லாப் பெயரும் அளபு இறந்தனவே விளிக்கும் காலை சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான. |
35 |
அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம் முறைப்பெயரொடு சிவணாது ஆயினும் விளியொடு கொள்ப தெளியுமோரே. |
36 |
த ந நு எ என அவை முதல் ஆகித் தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் அன்ன பிறவும் பெயர் நிலை வரினே இன்மை வேண்டும் விளியொடு கொளலே. |
37 |