துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: புதல்சூழ் பறவை

வாங்கிரு மருப்பின் தீம்தொடை பழுனிய
இடன்உடைப் போ஢யாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல
இடிஇசை முரசமொ(டு) ஒன்றுமொழிந்(து) ஒன்னார்
வேல்உடைக் குழூஉச்சமம் ததைய நூறிக் 5
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்
தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை வி஡஢ந்(து)உறை போகிய
ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறுமுரண் தாங்கிய தார்அரும் தகைப்பின் 10
நாள்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் தோன்றல்
தோல்மிசைத்(து) எழுதரும் வி஡஢ந்(து)இலங்(கு) எஃகின்
தார்பு஡஢ந் தன்ன வாள்உடை விழவின்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப் 15
பூத்த முல்லைப் *புதல்சூழ் பறவை*
கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. 20
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework