(கிடைக்கவில்லை)

பதிற்றுப்பத்தில் விட்டுப்போன, முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சார்ந்த
சில பகுதிகள் தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தொ஢ய வந்தன.
அவை வருமாறு:

(1)
இருங்கண் யானையொ(டு) அரும்கலம் துறுத்துப்
பணிந்துவழி மொழிதல் அல்லது பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உரும்உடன்று சிலைத்தலின் விசும்(பு)அதிர்ந் தாங்குக்
கண்அதிர்பு முழங்கும் கடும்குரல் முரசமொடு 5
கால்கிளர்ந் தன்ன ஊர்திக் கால்முளை
எ஡஢நிகழ்ந் தன்ன நிறைஅரும் சீற்றத்து
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
நீர்துனைந் தன்ன செலவின்
நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே. 10

(புறத்திரட்டு, பகைவயிற்சேறல், 8; தொல். புறத். 6,
இளம். 8; ந. மேற். அடி க:சீவக. 339, ந. மேற்.)


(2)
இலங்கு தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எ஡஢அவிழ்ந் தன்ன வி஡஢உளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடும்செல(வு) இவுளி
கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ(டு) 5
ஊன்வினை கடுக்குந் தோன்றல பொ஢(து)எழுந்(து)
அருவியின் ஒலிக்கும் வா஢புனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசம் கண்உற்றுக்
கதித்(து)எழு மாதிரம் கல்என ஒலிப்பக்
கறங்(கு)இசை வயிரொடு வலம்பு஡஢ ஆர்ப்ப 10
நெடுமதில் நிரைஞாயில்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை ஆர்அரண் காப்(பு)உடைத் தேஎம்
நெஞ்சுபுகல் அழிந்து நிலைதளர்(பு) ஒ஡ணஇ
ஒல்லா மன்னர் நடுங்க 15
நல்ல மன்றஇவண் வீங்கிய செலவே.

(தொல். புறத். 12, 25, ந. மேற்.)


(3)
பேணுதரு சிறப்பின் பெண்இயல்(பு) ஆயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர்த் தான்அறி குநளே.

(தொல். கற்பு. 39, ந. மேற்.)


(4)
வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் தேரொடு சுரந்து
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை
மா஡஢ என்னாய் பனிஎன மடியாய்
பகைவெம் மையின் அசையா ஊக்கலை 5
வேறுபுலத்(து) இறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலைதேய
மைந்துமலி ஊக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணிநின் பாசறை யானே. 10

(புறத்திரட்டு, பாசறை. 8)


(5)
'விசயந் தப்பிய' என்னும் பதிற்றுப்பத்து ஈகை
கூறிற்று

(தொல். புறத். 20, ந. மேற்.)
Add a comment
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்
வெருவரு தானையொடு வெய்(து)உறச் செய்துசென்(று)
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்(து) ஐந்(து)எயில் எறிந்து 5
பொத்தி ஆண்ட பெரும்சோ ழனையும்
வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வாஞ்சி மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
மந்திர மரபின் தெய்வம் பேணி 10
மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்
புரைஅறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக்(கு) அமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்(து)இவண் நிறீஇ
ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு 15
மன்உயிர் காத்த மறுஇல் செங்கோல்
இன்இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை, பஃறோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடுகாண் நெடு வரை, வெந்திறல் தடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை: இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான்விட்டான் அக்கோ.

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.
Add a comment
துறை: காவல்முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: துவராக் கூந்தல்

வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோ(டு)உறு மடமான் ஏறுபுணர்ந்(து) இயலப்
புள்ளும் மிஞிறும் மாச்சினை ஆர்ப்பப்
பழனும் கிழங்கும் மிசைஅற(வு) அறியாது
பல்ஆன் நல்நிரை புல்அருந்(து) உகளப் 5
பயம்கடை அறியா வளம்கெழு சிறப்பின்
பெரும்பல் யாணர்க் கூலம் கெழும
நன்பல் ஊழி நடுவுநின்(று) ஒழுகப்
பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின்
நாளின் நாளின் நாடுதொழு(து) ஏத்த 10
உயர்நிலை உலகத் (து) உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேம் தோன்றி
நோய்இலை ஆகியர் நீயே நின்மாட்(டு)
அடங்கிய நெஞ்சம் புகர்படு(பு) அறியாது
கனவினும் பி஡஢யா உறையுளொடு தண்எனத் 15
தகரம் நீவிய *துவராக் கூந்தல்*
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
வாள்நுதல் அ஡஢வையொடு காண்வரப் பொலிந்தே. 20
Add a comment

துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: வலிகெழு தடக்கை


மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்(சு)அற்(று) ஏமம் ஆகி இருள்தீர்ந்(து)
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா 5
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலம்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகல்ஆற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும்(பு) ஊர்தர 10
வாள்வலி உறுத்துச் செம்மை பூஉண்(டு)
அறன்வாழ்த்த நற்(கு)ஆண்ட
விறல்மாந்தரன் விறல்மருக
ஈரம் உடைமையின் நீரோர் அனையை
அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை 15
கொளக்குறை படாமையின் முந்நர்ண அனையை
பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உருகெழு மரபின் அயிரை பரவியும்
கடல்இகுப்ப வேல்இட்டும் 20
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலயவும் நிலத்தவும் அருப்பம் வெளவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை இ஡ணஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே 25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே 30
உரவுக்கடல் அன்ன தாங்(க)அரும் தானையொடு
மாண்வினைச் சாபம் மார்(பு)உற வாங்கி
ஞாண்பொர விளங்கிய *வலிகெழு தடக்கை*
வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் 35
ஆய்மயிர்க் கவா஢ப் பாய்மா மேல்கொண்டு
காழ்எஃகம் பிடித்(து)எறிந்து
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
வீங்குபெரும் சிறப்பின் ஓங்குபுக ழோயே 40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழைசெத்(து) ஆலும்
தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெள்கிணை கறங்கக்
கூழ்உடை நல்இல் ஏறுமாறு சிலைப்பச் 45
செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
காவி஡஢ப் படப்பை நல்நா(டு) அன்ன
வளம்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
வண்(டு)ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ 50
நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ஆ(க)என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக்(கு) 55
உரும்என முழங்கும் முரசில்
பெருநல் யானை இறைகிழ வோயே.
Add a comment
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கல்கால் கவணை

வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது
கடவுள் பெயா஢ய கானமொடு கல்உயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்
தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்
துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு) 5
அணங்(கு)உடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி அண்டர் ஓட்டிச்
சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக் 10
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்றம் எய்திய பொ஢யோர் மருக
வியல்உளை அ஡஢மான் மறம்கெழு குருசில் 15
விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆர்எயில் அலைத்த *கல்கால் கவணை*
நார்அ஡஢ நறவின் கொங்கர் கோவே
உடலுநர்த் தபுத்த பொலம்தேர்க் குருசில் 20
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றரும் தெய்வத்துக் கூட்ட முன்னிய
புனல்மலி போ஢யா(று) இழிதந் தாங்கு 25
வருநர் வரையாச் செழும்பல் தாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்
பாவை அன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு 30
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை வி஡஢ந்து விசும்(பு)உறு சேட்சிமை
அருவி அருவரை அன்ன மார்பின் 35
சேண்நாறு நல்இசைச் சேயிழை கணவ
மாகம் சுடர மாவிசும்(பு) உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல்நாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
உறுகால் எடுத்த ஓங்குவரல் புணா஢ 40
நுண்மணல் அடைகரை உடைதரும்
தண்கடல் படப்பை நாடுகிழ வோயே.
Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework