துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: ஏவிளங்கு தடக்கை

ஆடுக விறலியர் பாடுக பா஢சிலர்
வெண்தோட்(டு) அசைத்த ஒண்பூங் குவளையர்
வாள்முகம் பொறித்த மாண்வா஢ யாக்கையர்
செல்உறழ் மறவர்தம் கொல்படைத் தாணஇயர்
இன்(று)இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை 5
மண்புனை இஞ்சி மதில்கடந்(து) அல்ல(து)
உண்குவம் அல்லேம் புகாஎனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு(பு) அறியா வயங்குசெந் நாவின்
எயில்எறி வல்வில் *ஏவிளங்கு தடக்கை* 10
ஏந்(து)எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்பன் என்ப கானத்துக்
கறங்(கு)இசைச் சிதடி பொ஡஢அரைப் பொருந்திய
சிறிஇலை வேலம் பொ஢ய தோன்றும்
புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் 15
சீர்உடைப் பல்பக(டு) ஒலிப்பப் பூட்டி
நாஞ்சில் அடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework