வந்தே பிறந்தான்! - கண்ணன் வந்தே பிறந்தான் - மாதவன்
- விவரங்கள்
- ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்
- தமிழ்
ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபநிஸ்
அ - ஸ்நிபமகரிஸ
பல்லவி
வந்தே பிறந்தான்! - கண்ணன் வந்தே பிறந்தான் - மாதவன்
தேவகியோடணைந் தந்தே இருந்தான் (வந்தே)
அனுபல்லவி
மந்தமாருதம் மெல்லெனவீச - வானவர் மெதுவாய் வர்ணனைபேச
நந்தன் மனையெல்லாம் - சகுனங்கள் பேச
நம்முடை வஸுதேவன் கண்களும் கூசக்கூச (வந்தே)
சரணம்
1.
வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க -
மற்றவை சங்க சக்கரம் ஏற்க -
தலையை நீட்டி - வசுதேவனும் பார்க்க - அங்கே
சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க (வந்தே)
2.
தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை -
சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை
கலைசொல்லி - ஜாதகம் கணிப்பாரும் இல்லை - எங்கள்
கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை (வந்தே)
3.
கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க
கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க -
பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப்
பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க (வந்தே பிறந்தான்)