வையம் அளந்து வானளந்த ஓ மாதவா
- விவரங்கள்
- ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்
- தமிழ்
ராகம்: நாதநாமகரிய
தாளம்: தி.திரிபுட
ஆ - ஸரிகமபதநி
அ - நிதபமகரிஸநி
பல்லவி
வையம் அளந்து வானளந்த ஓ மாதவா
வரதா பயகரம் தரு கருமுகில் வர்ண
அனுபல்லவி
செய்யத் தாமரை சீரடி கொண்டு சீரிய காளீயன் மேலாடியது கண்டு
உய்ய தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு
உலகீரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அது தரும்
ஜதி
தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமிதிமி திர்ரீ தைய
ணந்தம் ணந்தம்பாரி ஜாத கந்தம்
கிடதகதிரி ஜமுணந்தரி குகுகுந்தம் ஜந்தரி திரி திலானா
தித்தளாங்கு தையததையத தித்ஜையத கஜ்ஜையத
திரி சையத்தைய புவனங்களும் உய்ய (வையம்)