பிரியார் எனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்
தரியாள் எனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க
எரியார் எழில்அழிக் கும்எழில் அம்பலத் தோன்எவர்க்கும்
அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே. ... 340
கொளு
உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ் குழலி வாடியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework