அன்பணைத்(து) அம்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்தன்
பின்பணைத் தோளி வரும்இப் பெருஞ்சுரம் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற(வு) உண்அளி போன்றொளிர் நாடகமே. .. 219
கொளு
மண்டழற் கடத்துக் கண்டவர் உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework