கணியார் கருத்தின்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே
மணியார் பொழில்காள் மறத்திற்கண் டீர்மன்னும் அம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால்
துணியா தனதுணிந் தார்என்னும் நீர்மைகள் சொல்லுமினே. .. 145
கொளு
நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து பருவரல் உற்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework