அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம்
படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில்
கடக்களி யானை கடிந்தவர்க் கோஅன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே. ... 297
கொளு
நல்லவர் முரசுமற்(று) அல்லவர் முரசெனத்
தெரிவ ரிதென அரிவை கலங்கியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework