அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்(பு)அயலார்
பெயர்ந்தும் ஒழியா விடின்என்னை பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான(து) அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் ஆதும் துறைவனுக்கே. .. 287
கொளு
ஆடிய வெறியிற் கூடுவ(து) அறியாது
நன்னறுங் கோதை இன்னல் எய்தியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework