கொன்னுனை வேல்அம் பலவன் தொழாரின்குன் றம்கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் எனஅயரா
என்னனை போயினள் யாண்டையள் என்னைப் பருந்தடும்என்(று)
என்னனை போக்கன்றிக் கிள்ளைஎன் உள்ளத்தை ஈர்க்கின்றதே. .. 231
கொளு
மெய்த்தகை மாது வெஞ்சுரம் செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework