பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய்
என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார்
சொன்னார் எனும்இத் துரிகதுன் னாமைத் துணைமனனே
என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே. .. 89
கொளு
அடல்வேலவன் ஆற்றானெனக்
கடல்அமிழ் தன்னவன் காணல் உற்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework