கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் அனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் அனையதுண் டோவந்த(து) ஈங்கொரு வான்கலையே. .. 53
கொளு
சிலைமான் அண்ணல் கலைமான் வினாயது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework