குவளைக்களத்(து)அம் பலவன் குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்(று) ஆண்ட அவயவத்தின்
இவளைக்கண்(டு) இங்குநின்(று) அங்குவந்(து) அத்துனை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி யான்இக் கடலிடத்தே. .. 37
கொளு
நயந்த உருவம் நலனும் கண்டு
வியந்த வனையே மிகுத்துரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework