விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுகலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற்றம்பலத் தான்அருள் இல்லவர்போல்
தலங்கலைச் சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே.
கொளு
கொலைகளிற் றண்ணல் குறைநயந்(து) உரைப்பக்
கலக்கங்செய் பாங்கன் கவன்(று) உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework