சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற்றம் பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை ஒவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே. .. 23
கொளு
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework