- விவரங்கள்
- திருவள்ளுவர்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- திருக்குறள்
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரை புல்லா விடல்.
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரந் தற்று.
நலத்தகை நல்லவர்ககு ஏஎர் புலந்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
ஊடல் உணங்க விடுவாரொடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
- விவரங்கள்
- திருவள்ளுவர்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- திருக்குறள்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைந்திரோ என்று.
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரார் ஆகுதிர் என்று.
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
- விவரங்கள்
- திருவள்ளுவர்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- திருக்குறள்
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.