எச்சவியல்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: சங்க இலக்கியம்
- தொல்காப்பியம்
| இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. |
1 |
| அவற்றுள், இயற்சொல்தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. |
2 |
| ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும் வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் இரு பாற்று என்ப திரிசொல் கிளவி. |
3 |
| செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. |
4 |
| வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. |
5 |
| சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். | 6 |
| அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும் விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும் நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர். |
7 |
| நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே. |
8 |
| அவற்றுள், நிரல்நிறைதானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றி சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல். |
9 |
| சுண்ணம்தானே பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர் ஒட்டு வழி அறிந்து துணித்தனர் இயற்றல். |
10 |
| அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து சீர் நிலை திரியாது தடுமாறும்மே. |
11 |
| பொருள் தெரி மருங்கின் ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும் தோற்றமும் வரையார் அடிமறியான. |
12 |
| மொழிமாற்று இயற்கை சொல் நிலை மாற்றி பொருள் எதிர் இயைய முன்னும் பின்னும் கொள் வழிக் கொளாஅல். |
13 |
| த ந நு எ எனும் அவை முதல் ஆகிய கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. |
14 |
| இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே. |
15 |
| வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே வினையின்தொகையே பண்பின்தொகையே உம்மைத்தொகையே அன்மொழித்தொகை என்று அவ் ஆறு என்ப தொகைமொழி நிலையே. |
16 |
| அவற்றுள், வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல. |
17 |
| உவமத்தொகையே உவம இயல. | 18 |
| வினையின்தொகுதி காலத்து இயலும். | 19 |
| வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று அன்ன பிறவும் அதன் குணம் நுதலி இன்னது இது என வரூஉம் இயற்கை என்ன கிளவியும் பண்பின்தொகையே. |
20 |
| இரு பெயர் பல பெயர் அளவின்பெயரே எண்ணியற்பெயரே நிறைப்பெயர்க் கிளவி எண்ணின்பெயரொடு அவ் அறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே. |
21 |
| பண்பு தொக வரூஉம் கிளவியானும் உம்மை தொக்க பெயர்வயினானும் வேற்றுமை தொக்க பெயர்வயினானும் ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே. |
22 |
| அவைதாம், முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும் இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும் அந் நான்கு என்ப பொருள் நிலை மரபே. |
23 |
| எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய. | 24 |
| உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர். |
25 |
| வாரா மரபின வரக் கூறுதலும் என்னா மரபின எனக் கூறுதலும் அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான் இன்ன என்னும் குறிப்புரை ஆகும். |
26 |
| இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும். | 27 |
| விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும். | 28 |
| கண்டீர் என்றா கொண்டீர் என்றா சென்றது என்றா போயிற்று என்றா அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி நின்ற வழி அசைக்கும் கிளவி என்ப. |
29 |
| கேட்டை என்றா நின்றை என்றா காத்தை என்றா கண்டை என்றா அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே. |
30 |
| இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற சிறப்புடை மரபின் அம் முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம் மூ இடத்தான் வினையினும் குறிப்பினும் மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும் அவ் ஆறு என்ப முற்று இயல் மொழியே. |
31 |
| எவ் வயின் வினையும் அவ் இயல் நிலையும். | 32 |
| அவைதாம், தம்தம் கிளவி அடுக்குந வரினும் எத் திறத்தானும் பெயர் முடிபினவே. |
33 |
| பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே சொல்லே குறிப்பே இசையே ஆயீர் ஐந்தும் நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி. |
34 |
| அவற்றுள், பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. |
35 |
| வினையெஞ்சுகிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே. |
36 |
| பெயரெஞ்சுகிளவி பெயரொடு முடிமே. | 37 |
| ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. | 38 |
| எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. | 39 |
| உம்மை எச்சம் இரு ஈற்றானும் தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே. |
40 |
| தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை நிகழும் காலமொடு வாராக் காலமும் இறந்த காலமொடு வாராக் காலமும் மயங்குதல் வரையார் முறைநிலையான. |
41 |
| என என் எச்சம் வினையொடு முடிமே. | 42 |
| எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும் எஞ்சு பொருட் கிளவி இல என மொழிப. |
43 |
| அவைதாம், தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும். |
44 |
| சொல் என் எச்சம் முன்னும் பின்னும் சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே. |
45 |
| அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். | 46 |
| மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல். | 47 |
| ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகு இடன் உடைய. |
48 |
| அவற்றுள், ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. |
49 |
| தா என் கிளவி ஒப்போன் கூற்றே. | 50 |
| கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. | 51 |
| கொடு என் கிளவி படர்க்கை ஆயினும் தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின் தன்னிடத்து இயலும் என்மனார் புலவர். |
52 |
| பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும் திசைநிலை கிளவியின் ஆஅகுநவும் தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும் மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே. |
53 |
| செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய் என் கிளவி ஆகு இடன் உடைத்தே. |
54 |
| முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே. |
55 |
| கடி சொல் இல்லை காலத்துப் படினே. | 56 |
| குறைச்சொற் கிளவி குறைக்கும் வழி அறிதல். | 57 |
| குறைத்தன ஆயினும் நிறைப் பெயர் இயல. | 58 |
| இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. | 59 |
| உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய. | 60 |
| வினையெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய. | 61 |
| உரையிடத்து இயலும் உடனிலை அறிதல். | 62 |
| முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே இன்ன என்னும் சொல் முறையான. |
63 |
| ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார். | 64 |
| ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே. |
65 |
| முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும். |
66 |
| செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம் பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல். |
67 |