தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

தற்சிறப்புப்பாயிரம்

கடவுள் வாழ்த்து

1) உலக மூன்று மொருங்குணர் கேவலத்
தலகி லாத வனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.

2) நாத னம்முனி சுவ்வத னல்கிய
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்
ஏத மஃகி யசோதர னெய்திய
தோத வுள்ள மொருப்படு கின்றதே.


அவையடக்கம்

3) உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென
எள்ளு கின்றன ரில்லை விளக்கினை
உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்
கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே.

நூல் நுவல் பொருள்

4) மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்
பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும்
வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்
தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே.


நூல்

முதற் சருக்கம்

நாட்டுச் சிறப்பு

5) பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை
நம்பு நீரணி நாடுள தூடுபோய்
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ
திம்ப ரீடில தௌதய மென்பதே.

நகரச் சிறப்பு்

6) திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்
வசை யிலாநகர் வானவர் போகமஃ
தசைவி லாவள காபுரி தானலால்
இசைவி லாதவி ராசபு ரம்மதே.

7) இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது
மஞ்சு லாமதி சூடின மாளிகை
அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்
விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.

அரசனியல்பு

8) பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி
பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்
மாரி தத்தனென் பானுளன் மன்னவன்.

9) அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்
மருவு மானுயர் வானவர் போகமும்
பொருவில் வீடு புணர்திற மும்மிவை
தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.

வேனில் வரவு

10) நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை
சரிந்த காதற் றடையில தாகவே
வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்
விரிந்த தின்னிள வேனிற் பருவமே.

வசந்தமன்னனை வரவேற்றல்

11) கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன
வாங்கு வாகை வளைத்தன சாமரை
கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி
பாங்கு வண்டொடு பாடின தேனினம்.

இதுவுமது

12) மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர
தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர்
கலந்த காதன்மை காட்டுநர் போலவே
வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.

அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்

13) உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட
வயந்த மன்னவன் வந்தன னென்றலும்
நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்
வயந்த மாடு வகையின ராயினர்.

14) கானும் வாவியுங் காவு மடுத்துடன்
வேனி லாடல் விரும்பிய போழ்தினில்
மான யானைய மன்னவன் றன்னுழை
ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.

ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்

15) என்று மிப்பரு வத்தினோ டைப்பசி
சென்று தேவி சிறப்பது செய்துமஃ
தொன்று மோரல மாயின மொன்றலா
நன்ற லாதன நங்களை வந்துறும்.

இதுவுமது

16) நோவு செய்திடு நோய்பல வாக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
காவல் மன்ன கடிதெழு கென்றனர்.

அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்

17) என்று கூறலு மேதமி தென்றிலன்
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்
நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத்
தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.

தேவியின் கோயிலை அடைதல்

18) சண்ட கோபி தகவிலி தத்துவங்
கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத்
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
கண்ட மாரி தனதிட மெய்தினான்.

அரசன் மாரிதேவதையை வணங்குதல்

19) பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்
தேவி மாட மடைந்து செறிகழன்
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.

20) மன்ன னாணையின் மாமயில் வாரணம்
துன்னு சூகர மாடெரு மைத்தொகை
இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன்.

21) யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை
ஈன மில்பலி யாக வியற்றினால்
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்
ஆன பூசனை யாற்றுத லாற்றென.

22) வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை
யீடி லாத வியல்பினி லில்வழி
யேட சண்ட கருமதந் தீகென
நாட வோடின னன்னகர் தன்னுளே.

அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்

23) ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந்
தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச்
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்
மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.

சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்

24) வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்¢
சிந்தையா னெறிக்கட் டீமை தீ¢¢ர்த்திடும் நியம முற்றி
அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்¢
முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.

சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்

25) உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்
அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை
யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்
துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.

சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்

26) அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்
எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி
நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார்.

இளைஞர் சரிகை செல்லுதல்

27) வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார்
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.

இதுவுமது்

28) வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி
நல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி
யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி
நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே.

மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்

29) அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.

இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்

30) எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல்
தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான்.
இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.

31) வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித்
தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்
அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில்
தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான்)

32) நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை
யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின்
அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ
மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்

33) அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால்
அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி¢
அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த
நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.

34) அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந்
தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்
நல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம்
மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ.

35) கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா
இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும்
பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம்.

36) பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்
சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே
இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம்.

(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)

நரககதி வரலாறு

37) முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ
றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம்
அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்
உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.

விலங்குகதி வரலாறு

38) அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல்
பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு
வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.

மனுஷ்யகதி வரலாறு்

39) ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட
பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.

தேவகதி வரலாறு

40) இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி
வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந
திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ.
தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்

தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்

41) துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா
அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத்
தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே
அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே.

42) வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி
தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக
இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந்
தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ.

43) மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்
தி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.

44) ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன்
மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் [றோ
நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும்
பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான்.

அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்

45) அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின்
நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி
விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற
கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள்.

இதுவுமது.

46) அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந்
திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.)
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்

இதுவுமது

47) பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத்
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.

48) இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம்
நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை
என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி
இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள்.

இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.

49) ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி
நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி
வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான்
நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண்

இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.

50) ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி
அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா
குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின்
யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘

இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்

51) உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்
பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்
அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும்
பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.

சித்தர் வணக்கம்

52) ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ்
வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார்
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித்
தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பா£.¢

அருகர் வணக்கம்

53) பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற
திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும்
உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித்
திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.

ஆசார்¢யர் வணக்கம்

54) ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார
மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார்
பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித்
தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார்.

உபாத்தியாயர் வணக்கம்

55) அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப்
பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட்
டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.

சர்வசாது வணக்கம்

56) பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற
கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச்
சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச்
சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார்.


57) இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு
தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி
முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக
கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.

இளைஞர் புன்முறுவல் செய்தல்

58) கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால்
இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.

இளைஞர் மன்னனை வாழ்த்துதல்

59) மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா
தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்
சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று
நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.

மன்னவன் மனமாற்ற மடைதல்

60) நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்
மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார்
அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால்
நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்

அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்

61) இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல்
நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன
அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌ¤வு சென்றாம்.

இதுவுமது

62) முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா
லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம்
மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு
என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.

அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்

63) கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற்
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்
பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.

மன்னனும் வியத்தல்

64) மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி
என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்
என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான்.

அபயருசியின் மறுமொழி

65) அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால்
மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று
பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல்
அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.

வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்

66) அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி
மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி
என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.

அபயருசியின் அறவுரை

67) மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப்
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல்
அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண
மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான்

இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.

68) எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார்
அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ்
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.

69) மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும்
புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும்
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ
சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.

70) ‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை
விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும்
ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா
வின்பமதா மென்னா திழித் துவர்மின்‘

71) பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா
லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென
றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட்
சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை

இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்

72) அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப்
பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட
திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான்
உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார்.


இரண்டாவது சருக்கம்

உஞ்சயினியின் சிறப்பு

73 ) வளவயல் வாரியின் மலிந்த பல்பதி
அளவறு சனபத மவந்தி யாமதின்
விளைபய னமரரும் விரும்பு நீர்மைய
துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே.

அசோகன் சிறப்பு

74) கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்
சந்திர மதியெனு மடந்தை தன்னுடன்
அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்

இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு

75) இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே
சந்திர மதியொரு தனயற் றந்தனள்
எந்துயர் களைபவ னெசோத ரன்னென
நந்திய புகழவ னாம மோதினான்.

யசோதரன் மணம்

76) இளங்களி றுழுவையி னேத மின்றியே
வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால்
உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான்.

யசோமதியின் பிறப்பு

77) இளையவ ளெழினல மேந்து கொங்கையின்
விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள
கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள்
வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே.

இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.

78) மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்
ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை
யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.

இளமை நிலையாமை

79) வண்டளிர் புரைதிரு மேனி மாதரார
கண்டக லுறவரு கழிய மூப்பிது
உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன்
வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.

துறவின் இன்றியமையாமை

80) இளமையி னியல்பிது வாய வென்னினிவ்
வளமையி லிளமையை மனத்து வைப்பதென்
கிளைமையு மனையதே கெழுமு நம்முளத
தளைமையை விடுவதே தகுவ தாமினி.

81) முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை
சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம்
முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய
மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.

யசோதரனுக்கு முடி சூட்டுதல்

82) இனையன நினைவுறீஇ யசோதர னெனுந்
தனையனை நிலமகட் டலைவ னாகெனக
கனை மணி வனைமுடி கவித்துக் காவலன
புனைவளை மதிமதி புலம்பப் போயினான்.

யசோதரன் அரசியல்

அசோகன் துறவு

83) குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந்
தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன
உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய்
வரையுடை வனமது மருவி னானரோ.

84) எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக்
கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன்
அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த
குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான்.

மன்னனின் மனமாட்சி

85) திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு
மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி
உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ
அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான்.

86) அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்
தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான்

87) தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால்
பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல்
ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும
நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.

யசோதரன் பள்ளியறை சேர்தல்

88) மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக
கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற
சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி
கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான்.

அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்

89) சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்
கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப
நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல்
அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள்.

இருவரும் இன்பம் நுகர்தல்

90) ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித்
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளா£.¢

இதுவுமது.

91) மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம
அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்
படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக
விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.

இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.

92) இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப
பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க்
மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே
தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்

பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்

93) ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்
சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும
வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்
தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.

அரசி மதிமயங்குதல்

94) பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம்
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்
மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள்.
பெண்மையின் புன்மை

95) மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா
என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே

குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்

96) துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி
யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை
துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன்
றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள்.

அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்

97) தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங்
கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை
பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித்
¢துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.

தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.

98) அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல்
கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும்
நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட
¢பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள்.

அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.

99) என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல்
சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள்.

அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.

100) மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்
கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி
நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை
வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.

அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.

101) என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை
தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன
என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே
துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே.

தோழி, பாகனைக் கண்டு மீளல்.

102) மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன்
ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே
கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள்
தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்

(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்

103) மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்
தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன்
றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்
என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்..

104) நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற்
குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள்.

105) பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா
சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம்
நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள்
கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே

அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்

106) என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம
¢சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும
ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம்
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ

107) காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல்
காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன்
ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக்
நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள்.

தோழியின் அச்சம்

108) தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான்
ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும்
பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ
நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.

இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.

109) ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்¢1
கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப
பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே
தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்¢ .

110) தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு
கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள்
முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ
லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே..

மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்

111) அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன்
உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத்
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே.

மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.

112) துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி¢
மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்
கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண்
செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான்.

அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்

113) கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்¢
புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே.
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே

அரசி மூர்ச்சை யெய்துதல்

114) இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல்
வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்¢
தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ¢
மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.

அரசி மூர்ச்சை தௌ¤ந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்

115) தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ¢
விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் [றாள்.
வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்¢

அரசியின் உறுதிமொழி

116) பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங்
கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ
எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர்
சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ.

மறைந்து நின்ற மன்னனின் செயல்

117) என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக்
கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே
யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும்
சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே

118) மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர்
பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்
டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண்
றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான்.

மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.

120) எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும்
மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத்
திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை
கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான்.

இதுவுமது

121) உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின்
திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக்
கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த
துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான்

மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்

122) மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள்
புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும்
கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான்.

மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.

124) மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை
சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை [யின்பச
மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே
கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.

இதுவுமது

125) நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே
மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்
¤புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்
மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே.

இதுவுமது.

126) புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய
விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற
தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி
விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான்.

சந்திரமதி ஐயுறல்.

127) மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா
வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ¢
பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய
துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று.

அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.

128) விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக
கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ
தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான்

உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்

129) கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா
இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த
பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால
விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம்

130) ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின்
மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்
கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை
மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு

131) மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே
கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே
சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல
கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள்.

மன்னன் நெறியறிந்து கூறல்

132) ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந்
தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி
ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில்
தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான்.

133) என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா
தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின்
என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்
மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான்.

134) யானுயிர் வாழ்த லெண்ணி யௌ¤யவர் தம்மைக் கொல்
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின்
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே.

135) அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோ£¢கள்
கொன்றுயி£¢ கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லா¢
இன்றுயி£¢ கொன்ற பாவத் திடா¢பல விளையு மேலால்
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம்.

மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்

136) என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்
சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து
சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள்.

137) மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக்
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற்
றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான்.

138) உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும
பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன
செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான்
அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான்.

139) மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே
தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ்
ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான்.

மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்

140) மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட
சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி
கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே.

141) என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி
சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல
பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த
கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான்.

142) ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை
ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை
ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன்.
ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா.

அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்

143) இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித்
தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான்
அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான்
எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள.

144) அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே
விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும்
அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால்
அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள்.

145) ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே
தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான்
தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே.

146) நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக
எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே
வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்
¢சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.

மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்

147) நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்¢
புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித்
துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.

உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்

148) எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை
கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின்
மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள்
பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார்.

விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்

149) தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண்
காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ்
சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார்
ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம்.

நகரத்து அறிஞர் கூறுதல்

150) அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌ¤யனல்லன்
மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான்
இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண
சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார்.

151) இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும்
நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக்
கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள்
மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள்.

152) இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண்
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்¢
புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே
மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள்.

யசோமதி முடிபுனைந்து அரசனாதல்

153) வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி
யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச்
சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான்
ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான்.

154) இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின்
இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம
இனையது தௌ¤வி லாதா ரிருநில வரசு செய்கை
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான்.

 

 மூன்றாஞ் சருக்கம்

யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்


155) மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர்
நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப்
பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்
புற்ற தாகு முரைக்குறு கின்றதே.

157) அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன்
வம்பு வாரண முட்டையின் வைத்துடன்
கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென
நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.

158) சந்தி ரம்மதி யாகிய தாயவள்
வந்து மாநக ரப்புறச் சேரிவாய
முந்து செய்வினை யான்முளை வாளெயிற்
றந்த மிக்க சுணங்கம் தாயினாள்.

159) மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக்
கியலு பாயன மென்று கொடுத்தனர்
மயரி யாகு மிசோமதி மன்னவன
இயலு மாளிகை யெய்தின வென்பவே.

160) மன்ன னாகிய மாமயின் மாளிகை
தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத்
தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண்
டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .

161) அஞ்சி லோதியர் தாமடி தைவரப்
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்
துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ
டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.

162) சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத்
தரைய மேகலை யாரி மைர்ந்துணும
அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய
இரைய வாவி யிருந்தயில் கின்றதே.

163) வந்து குப்பையின் மாசன முண்டபின்
சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின்
றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச்
சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே

164) நல்வ தத்தொ டறத்திற நண்ணலார
கொல்வ தற்குள முன்செய் கொடுமையான
ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர்
வெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.

165) மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை
யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை
முற்று வார்முலை யாண்முயங் குந்திறம
மற்ற மாமயில் வந்தது கண்டதே.

166) அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி
ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின
தப்பி லன்னது சாரன்றன் கண்களைக்
குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே.

167) முத்த வாணகை யாண்முனி வுற்றனள்
கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும்
மத்த கத்தை மடுத்து மறித்தது
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.

168) தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள்
நாய்பின் னோடி நலிந்தது கவ்விய
வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது
தீமை செய்வினை செய்திற மின்னதே.

169) நாயின் வாயில் நடுங்கிய மாமயில்
போய தின்னுயிர் பொன்றின மன்னவன்
ஆயு மாறறி யாத விசோமதி
நாயை யெற்றின னாய்பெய் பலகையால்.

யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்

170) மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி
துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை
இன்னல் செய்யுமோ ரேனம தாகிய
தன்ன தாகு மருவினை யின்பயன்..

171) சந்தி ரம்மதி நாயுமச் சாரலின்
வந்து காரிருள் வண்ணத்த நாகமாய
அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர்
வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.

172) தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற்
சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர்
பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ
போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.

மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்

173) மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்
இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்
உன்னு மொப்பி லுலோகித விப்பெயர்
மன்னு மீனின் வடிவின தாயிற்றே.

சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்

174) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
முந்து சன்று முதலைய தாயது¢
வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான
உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.

175) அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள்
வந்து வாயின் மடுத்தது கொண்டது¢
கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத்
தந்த கொல்கென மன்னவன் சாற்றினான்

176) வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின
சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢
கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர்
அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார்.

சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்

177) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்து வார்வலைப் பட்ட கராமரித
தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய்
வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.

178) மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை
அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர்
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்
குற்ற செய்கைக் குரித்தென வோதினார்.

179) அறுத்த மீனி னவயவ மொன்றினைக்
கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர
இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன
சிறக்க வென்றனர் தீவினை யாளரே.

180) நின்ற கண்டத்து நீளுயிர் போமது
சென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது
தின்று தின்று துறக்கத் திருத்துதல்
நன்று நன்றென நைந்திறந் திட்டதே

மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்

181) மன்னன் மாமயில் சூகர மாயமீன்
முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர
மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின
தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.

தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.

182) தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢
ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர
பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின
தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே.

183) தாய்வ யிற்கரு வுட்டக ராயது
போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன
தாயை வாளியிற் றானுயிர் போக்கினான்.

184) வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை
நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத்
தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென
ஆளி மொய்ம்ப னருளின னென்பவே.

யசோமதி பலியிடும் செய்தி கூறல்

185) மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன்
பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய்
உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான்
கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ.

186) இன்றெ றிந்த வெருமை யிதுதனைத்
தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின்
நன்றி தென்றன ரந்தணர் நல்கினார
நின்று பின்சில நீதிகள் ஓதினார்.

187) ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற்
காது காகங் கவர்ந்தன வாமெனின்
தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென
ஓதி னாரினி யொன்றுள தென்றனர்.

188) தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி
சாத நல்ல தகர்முகத் துப்படின
பூத மென்றனர் புண்ணிய நூல்களின்
நாத னாரத் துராதிக ணன்றரோ.

189) என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன்
நன்று நாமுன் வளர்க்க விடுத்தது
சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின
நன்றி தென்று நயந்தன ரந்தணர்.

190) சென்று நல்லமிர் துண்டது தின்றனர்
அன்று மன்ன னிசோதர னன்னையோ
டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென
நன்று சொல்லினர் நான்மறை யாளரே.

இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்

191) அத்த லத்தக ராங்கது கேட்டபின்
ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன
இத்த லத்திறை யான விசோமத
மத்த யானையின் மன்னவ னென்மகன்.

192) இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி
இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம்
இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம்
இதுவென் யானிவ ணின்னண மாயதே.

193) யான்ப டைத்த பொருட்குவை யாமிவை
யான்வ ளர்த்த மதக்களி றாமிவை
யான ளித்த குலப்பரி யாமிவை
யான்வி ளைத்த வினைப்பய னின்னதே.

194) இவர்க ளென்கடைக் காவல ராயவர்
இவர்க ளென்படை நாயக ராயவர்
இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர்
இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே.

195) என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத்
தன்ன மென்னடை யாளமிர் தம்மதி
மன்னு தன்மறை யானொருட வைகுமோ
என்னை செய்தன ளோவிவ ணில்லையால்.

196) அசைய தாகி யரும்பட ரொன்றிலா
இசையி லாதன யானுற வித்தலைத்
தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ்
வசையின மன்னவன் வானுல குய்க்குமோ.

197) பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம்
மேதி னிப்பதி யாதல் விடுத்தபின்
யாது செய்தன னோவினை யேனிடை
யாது செய்குவ னோவுண ரேனினி.

சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்

198) இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா
வினையி னாகிய வெந்துயர் தந்திடத்
தனையன் மாளிகை தன்னுள நோகமுன்
சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.

199) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்தி டங்கரு மாகிய வாடது
நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
வந்து மாயிட மாகி வளர்ந்ததே.

200) வணிகர் தம்முடன் மாமயி டம்மது
பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்
அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல்
வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.

201) தூர பாரஞ் சுமந்த துயரது
தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள்
ஆர மூழ்குவ தம்மயி டங்கரை
சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.

202) வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால்
அரைச வன்ன மெனும்பெய ராகும்நம்
அரைச வாகன மாயது போயதென்
றுரைசெய் தாரர சற்குழை யாளரே.

ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.

203) அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன்
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும்
பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான்
கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர்.

204) அரச னாணை யறிந்தரு ளில்லவர்
சரண நான்கினை யுந்தளை செய்தனர்
கரண மானவை யாவுங் களைந்தனர்
அரண மாமற னில்லது தன்னையே.

205) கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந்
தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர்
நெய்பெய் சலாகை கடைந்தபின்
கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.

206) ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி
மேய மேதித் தசைமிக வெந்ததை
வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்
மாயை செய்தன ளென்றனர் மற்றையார்.

207) இன்னு மாசை யெனக்குள திவ்வழித்
துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது
தன்னி னாய குறங்குக டித்தது
தின்னி னாசை சிதைந்திட மென்றனள்.

இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்

208) அனங்க னான பெருந்தகை யண்ணலைச்
சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்
கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்
மனங்கொ ளாவொரு மானுட நாயினை.

209) குட்ட மாகிய மேனிக் குலமிலா
அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்
நட்ட மாகிய நல்லெழின் மேனியள்
குட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.

210) அழுகி நைந்துட னஃகு மவயவத்
தொழுகு புண்ணி னுருவின ளாயினள்
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.

211) உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்
இம்மைச் செய்த வினைப்பய னேயிவை
எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை
பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.

212) நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல்
தீய வல்வினை தேடுத லேகொலோ
மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள்
மாய மற்றிது தன்னையும் வவ்வுமே.

பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்

213) என்று தன்புறத் திப்படிக் கூறினர்
சென்று சேடியர் பற்றிய வத்தகர்
ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும்
சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.

214) தேவி யென்னை முனிந்தனை சென்றொரு
பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ
பாவி நின்னுரு வின்னண மாயது
பாவி யென்னையும் பற்றினை யின்னணம்.

215) நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை
எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை
வஞ்ச னைமட வாய்மயி டம்மது
துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.

216) என்று கண்ட மொறுமொறுத் தென்செயும்
நின்று நெஞ்சம துள்சுட நின்றது
அன்று தேவி யலைப்ப வழிந்துயிர்
சென்ற தம்மயி டத்தொடு செல்கதி.

எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்

217) மற்றம் மாநகரத்து மருங்கினில்
சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின்
உற்று வாரணப் புள்ளுரு வாயின
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.

218) கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்
சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக்
கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்
மண்டு போர்வினை வல்லவு மாயவே.

219) தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன
மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த
வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ
தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே.


நான்காஞ் சருக்கம்

220) செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங்
கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச
செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.

221) இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.

222) பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற்
சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி
நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார்
பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.

223) வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன்
தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி
வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி
களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்

224) அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத்
தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த்
தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர்
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.

225) வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி
அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி
நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான்
முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.

226) ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச்
சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே
பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே
கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.

227) அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி
நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச்
சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி
அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான்.

228) கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை
இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே
ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை
பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும்.

229) மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும்
இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன்
உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும்
மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.

முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.

230) பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று
வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற
ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற
திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும்.

இதுவும் அது

231) சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப்
புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும்
ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த்
திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.

232) இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம்
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி
மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர்
ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும்.

233) ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர்
ஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும்
போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க்
காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான்.

234) அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும்
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக்
குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும்
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான்.

235) உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.

236) பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண்
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான்.

237) கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும்
மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும்
விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும்.

238) தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம்
பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள்.
ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி
பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ.

239) சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம்
உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக்
கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம்
அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான்.

முனிவரர் மீண்டும் கூறல்

240) ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால்
ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல்
வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே
சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான்.

241) இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க்
கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ்
சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ.

242) நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக்
கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச்
சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய்
அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம்.

243) இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய
மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.

244) வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந்
தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார்
ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார்
ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான்.

245) உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம்
மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால்
உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார்
செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.

246) மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச்
செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல்
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு
பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான்.

247) கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக்
கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட்
டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட
பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும்.

248) பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர்
மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே
அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம்
பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே.

249) அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக்
குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச்
செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன்
முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான்.

250) சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢
நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்
சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.

251) விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல்
அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம்
முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ
டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.

252) இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள்
பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங்
இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள்
பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே.

253) அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை
அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம்
பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார்
இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும்.

254) பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும்
வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க்
குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும்
அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன்.

255) நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ
டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல்
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.

256) இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச்
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும்
பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக்
கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான்

257) கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற்
கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும்
பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான்
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.

258) கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்
ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி
செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான்
நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.

259) அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால்
உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக்
கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ
மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.

இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்

260) காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர்
ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய
கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன்
வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான்.

261) வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்
அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்
சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான்
மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.

262) ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப
மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்
மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.

263) அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர்
கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர்
அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள்
கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே.

264) இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும்
நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும்
தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார்
அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய்.

265) இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென்
றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ்
செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢
வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய்.

266) என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே
கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி
இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன்
கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான்.

267) இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள்
கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப்
பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட
சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே.

இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தௌ¤விக்கின்றான்

268) மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே
போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே
ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே
போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.

269) நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும்
ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள்
சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம்
ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான்.

270) வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல்
தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான்
ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக்
கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான்.

271) யானுமல தெனதுமல திதமுமல தென்று
மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்
ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே
ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.

272) ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்
கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய்
நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய்.

273) என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச்
சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா
இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து
நின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான்.

274) இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே
மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில்
தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால்
நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.

275) முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப்
பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந்
துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப்
பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான்.

276) மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ்
சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட்
சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்
பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான்.

277) ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை
வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான்
ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன்
ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்.

சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்

278) அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப்
பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்¢
திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு
அருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ.

279) வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில்
துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி
அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள்
நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.

280) இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின்
மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே
வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்¢
தெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய்.

281) மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம்
நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம்
ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா
ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே.

282) ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச்
சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார்
போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார்
மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ.

283) செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே
கொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ்
செந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப
வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே.

284) கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை
பெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென்
றருகணைய நுந்துதலு மலறியது தழுவி
பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம்.

285) நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார
ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ
சாவவரி திவணரசி தகவில்வினை தருநோ
யாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ.

286) முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்
கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே
தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத்
தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய்.

287) திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின்
உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக்
கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும்
உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய்.

288) ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர்
இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும
பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும்
ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய்.

289) தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள்
அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ
வெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற்
சொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய்.

290) எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள்
கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே
நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த
வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.

291) மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய்
பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி
மன்னுசிறை வாரணம தாகிவத மருவி
மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.

292) சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்
வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி
முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி
வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.

293) இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென்
றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா
விதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா
மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.

294) ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந்
தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே
நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்
ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.

295) தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல்
மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி
சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான்.

296) எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும
வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ
அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும் [கேனோ.
வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்.

297) அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே
பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ
அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந்
தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.

298) மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே
ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல்
காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ
மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.

299) அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம்
நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர்
அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய
சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய்.

300) அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப்
பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்¢
டிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்.

301) என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக்
கன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற்
சென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான்
வென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ.

302) வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி
மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை
அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத்
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்

303) ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை
ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும்
நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப்
பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான்.

304) மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை
யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய
வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித்
துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார்.

305) தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால
ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத்
தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக்
காதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.

306) மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய
பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர்
ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய்
மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே.

307) வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்
தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து
வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.

308) ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின
சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின்
ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான்
ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.

309) அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப்
பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற்
கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள்
அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான்.

310) அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத
தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்
எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.

311) இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும்
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்
இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.

312) செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந்
எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே
மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ
தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின்

313) ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந்
தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தே
பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன்
மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான்.

314) இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு
    மெரித்திர ளெனவஞ்சிப்
    பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந்
    தற்கிது பொறையென்றே
    மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல்
    விடுத்தவ ருடன்போகி
    முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற்
    றெழுதுநன் முனியானான்.

315) வெய்ய தீவினை வெருவுறு மாதவம
    விதியினின் றுதிகொண்டான்
    ஐய தாமதி சயமுற வடங்கின
    னுடம்பினை யிவணிட்டே
    மையல் வானிடை யனசனர் குழாங்களுள்
    வானவன் றானாகித்
    தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம்
    தொகுதியின் மகிழ்வுற்றான்.

316) அண்ண லாகிய வபயனுந் தங்கையு
    மாயுக மிகையின்மை¢
    நண்ணி நாயக முனிவனி னறிந்தனர
    நவின்றநற் குண மெல்லாம்
    கண்ணி னார்தம துருவின
    துடலங்கள் கழிந்தன கழி போகத்
    தெண்ணில் வானுல கத்திரண் டாவதி
    னிமையவர் தாமானார்

317) அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ்
செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக்
நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த
வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.

318) வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி
மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும்
அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம்
வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந

319) மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத்
தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள்
ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம
ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின்

320) வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது
தருவது சுரகதி தந்து பின்னரும்
பொருவறு சிவகதி புணர நிற்பது
திருவற நெறியது செவ்வி காண்மினே.


யசோதர காவியம் முற்றிற்று.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework