நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்இவனின் தோன்றிய இவை' என இரங்கப்,
புரை தவ நாடிப் பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செலக்
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,
புல் இருள் பரத்தரூஉம் - புலம்பு கொள் மருள் மாலை.
இம் மாலை;
ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என்
கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்!
இம் மாலை;
இரும் கழி மா மலர் கூம்ப, அரோ, என்
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்!
இம் மாலை;
கோவலர் தீம் குழல் இனைய, அரோ என்
பூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும்!
என ஆங்கு;
படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக்,
குடி புறங்காத்து ஓம்பும் செம் கோலான் வியன் தானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework