செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையில்சென்று கிண்கிணி வாய்க் கொள்ளும் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுவமே. .. 123
கொளு
தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந்(து) உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework