துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வரைபோல் இஞ்சி

இழைஅணிந்(து) எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
மழைஎன மருளும் மாஇரும் பஃறோல்
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடு
மைந்(து)உடை ஆர்எயில் புடைபட வளைஇ
வந்துபுறத்(து) இறுக்கும் பசும்பிசிர் ஒள்அழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ்(பு) இழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
புனல்பொரு கிடங்கின் *வரைபோல் இஞ்சி* 10
அணங்(கு)உடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பி
வளன்உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன்அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி 15
அ஡஢யல் ஆர்கை வன்கை வினைநர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வா஢வண்(டு) ஓப்பும்
பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework