துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நன்நுதல் விறலியர்

அட்(டு)ஆ னானே குட்டுவன் அடுதொறும்
பெற்(று)ஆ னாரே பா஢சிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
சொ஡஢சுரை கவரும் நெய்வழி(பு) உராலின் 5
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
*நன்நுதல் விறலியர்* ஆடும்
தொல்நகர் வரைப்பின்அவன் உரைஆ னாவே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework